காலிப்பணியிடங்கள், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறையால் அரசு பஸ் சேவை பாதிப்பு
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

விருதுநகர்:தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டது.

இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்,என, சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்படும் 315 அரசு பஸ் பணிமனைகளில் 1.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 1.16 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். காலிப்பணியிடங்கள், உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையால் 2 ஆயிரம் பஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

15 ஆண்டு கடந்த பஸ்களை ஓரம் கட்டாமல் தொடர்ந்து இயக்குவதால் பழுதாகி நடுவழியில் நிற்கின்றன. ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வருவதும் கேள்விக் குறியாகியுள்ளது. வெவ்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களை புதிய வழித் தடங்களுக்கு மாற்றி விடுகின்றனர்.

குறைவான பஸ்கள் இயக்கத்தால் பள்ளி விடுமுறை நாட்களிலேயே அனைத்து வழித் தடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிகள் திறந்த பிறகு நிலைமை மேலும் சிக்கலாகும். இதை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதிரி பாகங்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X