சென்னையில் வங்கிக் கணக்கு சிக்கலில் ஊராட்சி தலைவர்கள்
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்னை இந்தியன் வங்கியில் கணக்கு துவக்கப்பட்டு அன்றாட வரவினங்களை அதில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தினசரி நிர்வாகச் செலவினங்களுக்கு பணம் எடுப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் ஊராட்சி தலைவர்கள் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் பொது நிதி கணக்கு, மின், குடிநீர் கட்டணம், ஊராட்சி, மாநில திட்டங்கள், நுாறு நாள் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், ஊழியர்களுக்கான சம்பளம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மத்திய நிதிக்குழு மானியம் என 11 வகை கணக்குகள் தனித்தனியாக பல்வேறு வங்கிகளில் உள்ளன.

தற்போது அனைத்து கணக்குகளையும் ஒரே வங்கி கணக்கின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

இதன்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்னை சைதாப்பேட்டை இந்தியன் வங்கியில் தனித்தனி கணக்குகள் துவக்கப்பட்டு ஜூன் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் தினசரி வசூலிக்கப்படும் வரி வருவாய் தொகையை இந்த கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் ஊராட்சியின் சார்பில் தினசரி செலவுகளுக்கு எப்படி பணம் கொடுப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படவில்லை.

இதனால் தற்போது பல்வேறு வங்கிகளில் உள்ள கணக்குகளின் இருப்புத் தொகையை எடுத்து செலவழித்து வருகின்றனர். அதுவும் இம்மாதத்திற்குள் காலியாகிவிடும். வரும் மாத செலவுக்கு என்ன செய்வது என தெரியாமல் ஊராட்சி தலைவர்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் கூறியதாவது: 11 கணக்குகளையும் ஒரே கணக்கில் கொண்டு வருவது நிர்வாக சிரமங்களை குறைப்பதால் வரவேற்கத்தக்கது.

அதே நேரம் தினசரி நிர்வாக செலவுகளுக்கு பணம் எடுப்பது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. செலவினங்களுக்கு பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.

எப்படி வருவாயை பெற்றுக் கொள்கிறார்களோ, அதுபோல் தினசரி நிர்வாக செலவினங்களுக்கும் பணம் வழங்க வழி செய்ய வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் பாதிக்கும், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X