ரூ.1.54 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் மர்ம நபர்களை தேடும் சுங்கத்துறை
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 1.54 Crore smuggled gold seized Customs Department looking for mysterious persons   ரூ.1.54 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் மர்ம நபர்களை தேடும் சுங்கத்துறை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே நொச்சியூரணி கடற்கரையில் படகிலிருந்த இரண்டரை கிலோ எடையுள்ள 4 தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தியவர்களை தேடி வருவதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ஜூன் 5ல் ராமேஸ்வரம் அருகே வேதாளை நல்ல தண்ணீர் தீவு கடற்கரையில் ரோந்து சென்றனர். அவ்வழியாக சென்ற ஒரு மீன்பிடி படகை நிறுத்தும்படி கூறினர். படகில் இருந்தவர்கள் வேகமாக தப்ப முயன்றதால் சுங்கத்துறையினர் விரட்டினர். புதுமடம் நொச்சியூரணி கடற்கரை அருகே பாறையில் மோதி படகு நின்றது. படகிலிருந்த 4 பேர் தப்பினர்.

படகில் ரூ.3 கோடி மதிப்பில் 5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தாக தகவல் வெளியானது. கடத்தல்காரர்கள் மேலும் பல தங்கக்கட்டிகளை கடலில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி சுங்கத்துறையினர் ஜூன் 6, 7 ல் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் கடலுக்கு அடியில் தேடினர். ஆனால் அலையின் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடும் பணியை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் சுங்கத்துறையினர் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரோந்து பணியின் போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கக் கட்டிகள் படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மதிப்பு ரூ.ஒரு கோடியே 54 லட்சம். கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம், என கூறியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X