13 ஆண்டு கூடுதலாக வழங்கிய ஓய்வூதியம்: மொத்தமும் பிடிப்பதால் ராணுவ வீரர் தவிப்பு
Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Soldier distressed as 13 years of additional pension is taken in full  13 ஆண்டு கூடுதலாக வழங்கிய ஓய்வூதியம்: மொத்தமும் பிடிப்பதால் ராணுவ வீரர் தவிப்பு

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வங்கியில் ஏற்பட்ட தவறால் ஓய்வு ராணுவ வீரருக்கு 13 ஆண்டுகளுக்கான கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டாக இவருக்கான ஓய்வூதியம் வழங்காமல் வங்கி பிடித்தம் செய்வதால் தவிக்கிறார்.

தென்னம்பட்டி எலப்பார்பட்டியை சேர்ந்தவர் கே.குரும்ப தேவன். 1954ல் பிறந்த இவர் ராணுவத்தில் 1973ல் சேர்ந்து 1997ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வூதியத்தை வடமதுரை கனரா வங்கி மூலம் பெற்று வந்தார். 2009 ஜூனில் இவருக்கு 80 வயது எட்டியதாக தவறாக கணக்கிட்ட வங்கி ஓய்வூதிய நடைமுறைப்படி இவருக்கு 2022 வரை ரூ.18,74,476 ஐ கூடுதலாக வழங்கியது. 2022ல் இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குரும்பதேவன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் முடக்கியது. மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.

குரும்பதேவன் கூறியதாவது: 25 ஆண்டுகளில் இரு பிரிவுகளில் பணிபுரிந்ததால் இரட்டை ஓய்வூதியம் கிடைப்பதாக நினைத்தேன். தற்போது கூடுதலாக வழங்கி விட்டோம் என்று முழு ஓய்வூதியத்தையும் முடக்கியுள்ளனர். வயதான காலத்தில் பணம் இல்லை என்பதால் உறவுகளும் புறம் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.

மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க செயலாளர் எல்.ராஜூ கூறியது: 2022 ஜூன் வரை வங்கிகளுக்கு ராணுவம் வழங்கும் உத்தரவுபடி ஓய்வூதியம் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. 80 வயது கடந்தவருக்கு 20 சதவீதம், 85 கடந்தவருக்கு 30, 90 கடந்தவருக்கு 40, 95 கடந்தவருக்கு 50, 96க்கு மேல் 100 சதவீதம் அடிப்படை ஓய்வூதியம், அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும்.

2022 ஜூனுக்குப்பபின் ராணுவமே ஓய்வூதியர் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்ப துவங்கியது. அப்போது தான் குரும்பதேவனுக்கு தவறுதலாக அதிக ஓய்வூதியம் வழங்கியது தெரிந்தது. இதுபோன்ற தவறுகள் நடந்தாலும் ஓய்வூதியத்தை நிறுத்த கூடாது என உத்தரவு உள்ளது, என்றார்.

வங்கி மேலாளர் விஷ்ணு கூறுகையில், 'ஓய்வூதியரின் வாழ்வாதாரம் கருதி குறிப்பிட்ட தொகையை அவருக்கு ஓய்வூதியமாக வழங்க அனுமதி கேட்டு தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
Dhandapani - Madurai,இந்தியா
13-ஜூன்-202307:25:04 IST Report Abuse
Dhandapani ராணுவவீரரிடம் நேர்மையில்லை சார் கணக்கில் காசுகூடவருதுஎன்றால் அதுஎவ்வாறு வருது என வங்கிச்சென்று கேட்டிருந்தால் இந்நினைவந்திருக்காது சார்
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
12-ஜூன்-202317:43:07 IST Report Abuse
S Ramkumar அட அதிக பணம் வங்கியில் வந்தால் செலவழிக்கத்தானே செய்வார்கள். ஆனால் வங்கியில் கணக்குகளுக்கு தவறான முறையில் பணம் அனுப்பப்பட்டு இருந்தால் அதை தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமே. நீதி மன்ற தீர்ப்பு இருக்கு. ஒய்வு ஊதியம் நிறுத்த கூடாது என்ற தீர்ப்பை சுட்டி காட்டுபவர்கள் இந்த தீர்ப்பையும் சுட்டி கட்டலாம். பதினெட்டு லட்சம் என்பது அதிகம். இவர் சரியான நேரத்தில் வங்கியை அணுகி சொல்லி இருந்தால் இவ்வளவு வந்திருக்காது. இவரின் வயதை கணக்கிட்டு பிடித்தம் செய்யும் பொது ஒன்றும் மிஞ்சாது. தீர்ப்பாயத்தை அணுகி மீண்டும் பணம் திருப்ப செலுத்தினால் ஒருவேளை மீண்டும் ஓய்வூதியம் கிடைக்கலாம்.
Rate this:
Cancel
Sridharan M - Chennai ,இந்தியா
10-ஜூன்-202321:39:32 IST Report Abuse
Sridharan M தனிநபர் இராணுவ வீரர் மீது தவறு இல்லை என்றால் அவருக்கு வழங்கப்பட்ட மிகை ஊதியம் நிர்வாகத் தவறால் ஏற்ப்பட்டது. அவ்வாறு நிர்வாகம் செய்யும் தவறுகளுக்கு தனிநபர் பொறுப்பல்ல என்றும் அந்த மிகை ஊதியத்தை அவரிடமிருந்து பிடித்தம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் அளித்துள்ளது. எனவே அவர் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம். இருப்பினும் அவருக்கு உரிய ஓய்வூதியம் மட்டுமே இனி கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X