தொழில் போட்டியில் ரவுடி வெட்டிக்கொலை தம்பதி உட்பட 6 பேர் கைது
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

பெரம்பலுார்:-பெரம்பலுாரில், தொழில் போட்டி காரணமாக, ரவுடியை வெட்டிக் கொலை செய்த, மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த தம்பதி உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,39, என்பவர் தி.மு.க., கிளை செயலராகவும் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'தமிழ் தேசம்' என்ற சினிமா இயக்கிய அவர், முஸ்லீம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டதால், அப்துல் ரகுமான், என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

ஏற்கனவே, நண்பரை வெட்டிக்கொலை செய்தது உட்பட இரண்டு கொலை வழக்கு, வழிப்பறி கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 5ம் தேதி, பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில், நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடியான அழகிரிக்கும் செல்வராஜுவுக்கும் தொழில் போட்டி இருந்துள்ளது.

மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதில், அழகிரிக்கு போட்டியாக செல்வராஜ் இருந்ததால், செல்வாக்கு குறைந்து வந்தது.

இதனால், ஆத்திரமடைந்த அழகிரி, தனது மனைவி சங்கீதாவுடன் திட்டம் தீட்டி, திருச்சியை சேர்ந்த கும்பலை வரவழைத்து, செல்வராஜை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்ந்து, செல்வராஜை கொலை செய்த, பெரம்பலுாரை சேர்ந்த அபினாஷ்,22, செஞ்சேரி நவீன்,19, ஆலம்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன், துறையூர் நவீன்,20, திருச்சி மாவட்டம், பூலாங்குடி காலனி பிரேம் ஆனந்த்,45, அவரது மனைவி ரமணி, 34, ஆகிய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அபினாஷ் துறையூர் நவீன், செஞ்சேரி நவீன், பிரேம்ஆனந்த் ஆகிய நால்வரை திருச்சி மத்திய சிறையிலும், ரமணியை, திருச்சி பெண்கள் சிறையிலும், 17 வயது சிறுவனை திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X