அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி நிதி நிறுவன அலுவலகங்களில் போலீசார் சோதனை
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

தர்மபுரி:அதிக வட்டி தருவதாகநிதி நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் அலுவலககதவை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் சோதனை செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரை சேர்ந்தவர் ராஜா; இவரது மகன்கள் அருண்ராஜ் 37 ஜெகன்ராஜ் 30; இருவரும் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021 முதல் 'பர்பெக்ட் விஷன் சிட்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தினர்.

இதில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 1800 என 100 நாட்களில் 1.80 லட்சம் ரூபாய் திருப்பி தரப்படும் என ஆசை வார்த்தை கூறி விளம்பரங்களை வெளியிட்டனர்.

இதை நம்பி தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். அவர்களுக்கு கடந்த 2022 மே 26 வரை கூறிய படி பணம் வழங்கப்பட்டது.

அதிக வருவாய்க்கு ஆசைப்பட்ட பலர் பல கோடி ரூபாய் வரை மீண்டும் இவர்களிடம் முதலீடு செய்தனர். இந்நிலையில் அவர்கள் அருண்ராஜ் ஜெகன்ராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை. தர்மபுரியிலுள்ள தலைமை அலுவலகம் ஏலகிரி ஓசூர் போச்சம்பள்ளி கிளை அலுவலகங்களுக்கு சென்றபோது அங்கு அலுவலகங்கள் மூடியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பலர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சிவக்குமார் தர்மபுரி இன்ஸ்பெக்டர் கற்பகம் மற்றும் போலீசார் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரிலுள்ள அருண்ராஜ் ஜெகன்ராஜ் வீட்டில் சோதனையில் ஈடுபட்டதுடன் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் தர்மபுரியில் செயல்பட்ட நிதி நிறுவன தலைமை அலுவலகத்தில் சோதனையிட சென்றபோது பூட்டியிருந்ததால் அலுவலக பூட்டை உடைத்து சோதனையிட்டனர்.

இதில் அருண்ராஜ் ஜெகன்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக பணம் பெற்றவர்களின் விபரங்கள்உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்துவருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X