பிரசவத்தில் குழந்தை இறப்பு; உறவினர்கள் சாலை மறியல்
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 infant death in childbirth; Relatives block the road    பிரசவத்தில் குழந்தை இறப்பு; உறவினர்கள் சாலை மறியல்



விக்கிரவாண்டி : அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்ததாக புகார் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சிகாமணி மனைவி வினிதா,22; கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதும், அவரை மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறி, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது.

மேலும், வினிதாவின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர் .

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நேற்று மாலை 6.௦௦ மணியளவில் முண்டியம்பாக்கம் மருத்துவமனை எதிரே பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் சென்னை -திருச்சி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X