தட்டு, டம்ளர் வாங்க 'ஸ்பான்சர்' தேடல்: காலை உணவு திட்டத்திற்கு சோதனை
Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருப்பூர்: அரசு துவக்க பள்ளிகளில் காலை உணவுதிட்டத்தை செயல்படுத்ததேவையான தட்டு, டம்ளர் வாங்க நிதி ஒதுக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகத்தினர், நன்கொடையாளர்களை தலைமை ஆசிரியர்கள் நாடி வருகின்றனர்.



latest tamil news



தமிழகத்தில், அரசுதுவக்க பள்ளிகளில் காலைஉணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு செப்.,15ல் துவக்கி வைத்தார்.

நடப்பு கல்வியாண்டில், தமிழகம் முழுதும், 1500க்கும் மேற்பட்ட துவக்க பள்ளிகளில், 1.14 லட்சம் மாணவ - மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

'மகளிர் திட்டம் சார்பில், மகளிர் குழுக்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாணவர்களுக்கு தேவையான தட்டு, டம்ளர் வாங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், சிக்கல் எழுந்துள்ளது.

ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 'காலை சிற்றுண்டி வழங்க மாணவ, மாணவியருக்கு தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்களை, அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் நன்கொடையாளர் கள் வாயிலாக பெற்றுக் கொள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்' என்றனர்.

இதனால், தேவையான தட்டு, டம்ளர் வாங்க, பாத்திரக் கடைகளில்விலைப்பட்டியல் வாங்கி,ஊராட்சி தலைவர், நன்கொடையாளர்களின் உதவியை தலைமை ஆசிரியர்கள் நாடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் செயலர் அசோக்குமார் கூறுகையில், ''தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்களை வாங்கித்தர தலைமையாசிரியர்கள் கேட்கின்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், இச்செலவினத்தை ஏற்பது சிரமம் தான். நாங்களும், எங்கள் பகுதி நிறுவனங்கள், தன்னார்வலர்களிடம் நன்கொடை பெற வேண்டிய சூழல் உள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், இதுபோன்ற செலவினங்களை ஈடுகட்டவும் அரசே நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
09-ஜூன்-202310:30:36 IST Report Abuse
Srivilliputtur S Ramesh சாப்பிட தட்டு, டம்ளர் வாங்க அரசிடம் பணமில்லை. ஆனால், உயிரோடு இல்லாத ஒருவரின் எழுதாத பேனா ஒன்றை கடலின் நடுவே நட்டு வைப்பதற்கு ரூபாய் 81 கோடி மட்டும் இருக்கும்.... என்ன இது திராவிட மாடல் அரசு ??
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஜூன்-202310:17:44 IST Report Abuse
duruvasar முழுமைப் பெற்ற திராவிட மாடல் ஆட்சியின் முதன்மை உதாரணம்தான் இது. தலைமையாசிரியிர்களை பிச்சை எடுக்க வைக்கும் திட்டம். கேள்வி கேட்பவர்களை மிரட்டமட்டுமே தெரிந்த துறை அமைச்சர் வேறு. வாழ்க திராவிடம்.
Rate this:
Cancel
Rajinikanth - Mylapore,இந்தியா
09-ஜூன்-202310:10:57 IST Report Abuse
Rajinikanth மதிய உணவு திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது அல்லவா? அதற்கு ஏற்கனவே தட்டு டம்ளர் எல்லாம் வைத்து இருக்கவில்லையா பள்ளிகள்? அதையே பயன்படுத்த வேண்டியது தானே? மதிய உணவு திட்டத்திற்கும் தட்டு இல்லையென்றால் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X