மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (32) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி, விண்ணமங்கலம் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், 'காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது' என கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில்,90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி துவங்கியது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டது. தொடர்ந்து,தூர்வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சாவூருக்கு வருகை தந்தார்.






Latest Tamil News
Next News

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பயனியர் மாளிகையில்,தங்கி இருந்த நிலையில், இன்று (09ம்தேதி) காலை தூர்வாரப்பட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் முதலைமுத்து வாரியின் எல்லை 11.800 கி.மீ முதல் 15.300 கி.மீ வரை மொத்தம் 3.50 கி.மீ தூரம் 20 லட்சம் ரூபாய், விண்ணமங்கலம் சி பிரிவு வாய்க்கால் 920 மீட்டர் தூரம் 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக விவசாயிகள்,பொதுமக்கள் பலரிடம் மனுக்களை பெற்றார்.



மேகதாது



ஆய்வுக்கு பின்னர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: காவிரி பகுதியில் உள்ள கால்வாய்களை தூர் வார முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் விரைவில் நிறைவுபெறும். வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்க உள்ளேன். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. திமுக ஆட்சியில் வேளாண் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (32)
10-ஜூன்-202306:01:27 IST Report Abuse
ராஜா காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் .... போன கதை தான் நடக்கப்போகிறது.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
10-ஜூன்-202300:07:37 IST Report Abuse
Siva முதல்வர் நல்ல தூங்கினாரா.. அவர் பேசுவதை கேட்டால் இன்னும் அரைதூக்கத்தில் இருப்பது நிஜம்.... நாட்டு நடப்பு தெரியாமல் உள்ள தமிழக முதல்வர் பாவம்...
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
09-ஜூன்-202322:36:09 IST Report Abuse
R. Vidya Sagar 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூடும்பொழுது இதைப்பற்றி பேசுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X