அரசு பஸ் மோதி இளைஞர் பலி
Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Youth killed in government bus collision  அரசு பஸ் மோதி இளைஞர் பலி

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே அரசு பஸ் மோதி கார் ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று இரவு 10 மணி அளவில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே சென்று கொண்டிருந்தபோது புத்தூரிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் மோதியதில் காரின் முன் பகுதி நசுங்கி காரை ஓட்டிச் சென்ற புத்தூர் மேல தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவபாலன் (38) என்பவர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி இறந்தார்.
காரில் பயணம் செய்த புத்துரை சேர்ந்த சக்திவேல் (28), பாலமுருகன் (27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். அரசு பஸ் சாலை ஓரம் சென்று நின்றது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சிவபாலன் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது. இவருக்கும் ஓவியா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று வருடம் ஆன நிலையில் இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Kundalakesi - Coimbatore,இந்தியா
09-ஜூன்-202311:58:55 IST Report Abuse
Kundalakesi This road is still single lane.. please expand at war pace
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X