கோவை: அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் 49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காரமடை ஒன்றியம் மருதூர் பஞ்சாயத்து தலைவர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பூர்ணிமா, வயது 40. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர். இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியுள்ளார். மொத்தம் வழங்கிய 1878 வேலை அட்டைகளில் 319 அட்டை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தனியார் நிறுவன ஊழியர்கள்; ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் அட்டை பெற்றுள்ளனர். 40 ஆண்டுக்கு முன் இறந்தவர் பெயரிலும் அட்டை தரப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களுக்கு அட்டை வழங்கி அரசு பணம் நூதனமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி மூலம் அரசுக்கு பணம் 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் பற்றி தெரிய வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் மோசடி நடந்திருப்பதும் அதன் மூலம் ஊராட்சி தலைவர் பூர்ணிமா பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவினர் பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
ரூ 1000 திருட்டு. திருடனை கைது செய்த போலீசார். நீதிமன்றத்தில் ஆஜர். அவருக்கு 6 மாத சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பு. ரூ 1000 கோடி ஊழல். ஊழல் செய்தவரை தேடிக்கொண்டே இருக்கின்றது போலீஸ் - இது தான் திருட்டு திராவிட மடியல் அரசு
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.