பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



ஈரோடு: பள்ளி குழந்தைகளுக்கு இந்தாண்டு சாலை விபத்தில்லாத ஆண்டாக, பள்ளி வாகன இயக்கத்தை மேம்படுத்த பெற்றோர், அரசு அலுவலர், போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பள்ளிகள் விரைவில் திறக்கவுள்ள நிலையில், தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் அஜாக்கிரதையாக, கவனக்குறைவாக, அதிவேகமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதை மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சாலைக்கு வந்து கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்பதே பெற்றோர் விருப்பம்.

ஈரோடு மாவட்டத்தில், 196 தனியார் பள்ளிகளில், 1,384 பஸ், வேன்கள் உள்ளன. இவற்றில் மே 13ல் துவங்கி ஒவ்வொரு பகுதியாக அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிர்ணயித்த வேகத்தில் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும். உதவியாளர்கள் அவசியம். வாகனத்தின் பின்புறம் மாணவர் இல்லாததை உறுதி செய்த பின், ஓட்டுனர்கள் இயக்கி, பள்ளி குழந்தைகளுக்கு இந்தாண்டு விபத்தில்லாத ஆண்டாக மாற்றுவதை குறிக்கோளாக கொள்ள, பெற்றோர், அரசு அலுவலர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவை நாதன், வெங்கட்ரமணி, சக்திவேல் கூறியதாவது: பள்ளி வாகனத்தின் முன்புறம், பின்புறம் கேமரா அமைக்க வேண்டும். கேமரா பதிவுகளை டிரைவர் வாகனத்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் முன்புற, பின்புற கேமராக்களை பள்ளிகள் கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும். இதற்கு மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தகுதி சான்று பெற வரும்போது கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்த பிறகே வழங்கப்படும். இது மட்டுமல்ல, அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிக்கப்படுவது அவசியம். பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பொருளாளர் சிவக்குமார் கூறியதாவது: பள்ளி வாகனத்தில் வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறது. பஸ்சில் ஏறும், இறங்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கையை உதவியாளர் உறுதி செய்கிறார். ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு பள்ளி அலுவலர் பொறுப்பு அலுவலராக உள்ளனர். கால தாமதத்தை தவிர்க்க, 10 நிமிடங்கள் முன்னதாக கிளம்ப அறிவுறுத்தியுள்ளோம். வாகனத்தை சீராக இயக்க வேண்டும். திடீர் பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். மாலையில் பெற்றோர் இருப்பதை உறுதி செய்த பிறகே, மாணவ, மாணவிகளை இறக்கி விட ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
பள்ளி நிர்வாகமும் மாதந்தோறும் டிரைவர்களுக்கு ஆலோசனை கூட்டம் போடுகிறது. இது தவிர வட்டார போக்குவரத்து அலுவலர்கள், லோக்கல் போலீசாரும் கூட்டம் போடுகின்றனர். மாணவ, மாணவிகளை விபத்தில் இருந்து தவிர்க்கும் வகையில், பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனை ஏற்க கூடியவை தான். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X