கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், நவசண்டி மஹாயாக இரண்டு நாள் விழா நேற்று துவங்கியது. இதையொட்டி காலை, 7:30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம் ஆகியவை நடந்தன. பகல், 12:00 மணிக்கு மஹா தீபாராதனை, பிரசாதம் வழக்குதலும், மாலை, 5:00 மணிக்கு கலச பூஜை, சண்டி பாராயணம், லலிதா ஸஹஸ்ரநாமம், குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜையும், மஹா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஜூன் 9) காலை, கோபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், நவசண்டி மஹாயாகம் ஆகியவை நடக்க உள்ளன.