சிறுமியின் சடலம் மறு பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம்
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


குளித்தலை:

நீதிமன்ற உத்தரவின்படி, சிறுமியின் சடலம் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
குளித்தலை அடுத்த, சவாரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி. 45 கூலி தொழிலாளி. இவரது மகள் தேவிகா, 16, அதே கிராமத்தை சேர்ந்த நங்கவரம் டவுன் பஞ்., ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் குணசேகரன் மகன் கஜேந்திரன், 19 இருவரும் காதலித்து வந்தனர். மகனின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மே, 24 இரவு, 10:00 மணியளவில் தேவிகா, அவரது அக்கா இருவரும் காதலன் கஜேந்திரனிடம் தனியாக பேச சென்றனர். அப்போது. கஜேந்திரன் உறவினர்கள் தேவிகாவை தாக்கினர். அவர்களிடமிருந்து தேவிகாவின் அக்கா தப்பித்து, தன் உறவினர்களிடம் தகவலை தெரிவித்தார். உறவினர்கள் கஜேந்திரன் வீட்டிற்கு சென்றபோது, தேவிகா இங்கு வரவில்லை, எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.
இந்நிலையில் மறுநாள், தனது மகளை காணவில்லை என தேவிகாவின் தாய் கலைவாணி குளித்தலை போலீசில் புகாரளித்தார். இதற்கிடையில், மே 26ல் காலை சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தேவிகா சடலமாக மிதந்தார். அவரது சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தேவிகாவின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து, தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அவரது உடலை இரண்டாவது முறையாக வேறு மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே, 27ல், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தேவிகாவை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து, காதலன் தந்தை குணசேகரன், 53. காதலன் மாமா முத்தையன், 51. காதலன் கஜேந்திரன், 19 ஆகியோரை கைது செய்தனர். தேவிகாவின் குடும்பத்தினர் சார்பில், மறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர்.
நேற்று முன்தினம் மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நள்ளிரவு, 2:30 மணிக்கு உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைத்தனர். பிரேதத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள் நேற்று காலை, 10:30 மணிக்கு சவாரிமேடு கிராமத்தில் தேவிகாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X