கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கரூர்: கரூர், அரசு கலைக்கல்லுாரியில் நேற்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.
கரூர் அரசு கலைக் கல்லுாரியில், 2023--24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லுாரியில், 1,280 இடங்களுக்கு 7,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த, 30 ல் தொடங்கியது. அன்று, சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடந்தது.
கடந்த, 2-ல் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 5-ல், பி.காம்., பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கும், 6ல் வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. நேற்று முன்தினம் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது.நேற்று இளம் அறிவியல் விலங்கியல், 80, தாவரவியல் 80, புவியியல் 80, புவிஅமைப்பியல் 40, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் 40 என மொத்தம், 320 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடந்தது. நேற்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இரண்டாம்
கட்டமாக வரும், 14, 16-ல்
நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X