நாமக்கல்; முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம், கீராம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தொழில், 4.O தொழிற்நுட்ப மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். கீராம்பூர் அரசு ஐ.டி.ஐ., நிலையத்தில், 33.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக தொழில், 4.O தொழிற்நுட்ப மையத்தை முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தற்போது பயிற்சி பெற்று வரும், 176 மாணவ, மாணவிகளோடு கூடுதலாக, 104 பேர் பயனடைவர்.
ஆர்.டி.ஓ., சரவணன், ஐ.டி.ஐ., முதல்வர் செல்வம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்பயிற்சி நிலையம் பயிற்றுனர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.