இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டும்!
Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 To save the younger generation!   இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டும்!

கஞ்சா, பான்பராக், குட்கா, கூலிப், ஹான்ஸ் போன்ற போதை வஸ்து பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்லூரி முதல் பள்ளி மாணவர்கள் வரை பரவிக் கிடக்கிறது. மாணவர்களை இதில் இருந்து மீட்கவும், தடுக்கவும் வழி சொல்கின்றனர் கோவை மக்கள்.

போதைப்பொருட்களின் வகைகளும், அதன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, அதற்கேற்ப அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது இளைய சமுதாயத்தை சீரழிக்கிறது. அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-- கோமதி, வீட்டுப்பெண்மணி கடலைக்காரசந்து

பள்ளி, கல்லுாரி அருகே மதுக்கடைகள் உள்ளன. மளிகை கடைகளில் பான்பராக்,குட்கா, ஹான்ஸ், கூலிப் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இவற்றை குழந்தைகள் எதிரிலேயே பலரும் பயன்படுத்துகின்றனர். விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் இது போன்ற காட்சிகள் வருகின்றன. குழந்தைகளை குழந்தைகளாக வாழவிடுங்கள்.

-சாரதாஸ்ரீ, அவிநாசி சாலை

இன்றைய இளைய தலைமுறை போதைக்கு அடிமையாகிப்போனது.மீட்டு நல்வழிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். அதற்காக அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அது அவர்களது கடமையாகும்.

-புகழேந்தி வீரகேரளம்

நம் சமூகம் போதைப்பொருட்களால் புரையோடிப்போய்விட்டது. அதை சீர்செய்வதென்பது ஓரிரு நாட்களில் நடந்து விடாது. அதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அரசின் சமூகநலத்துறை வேகமாக இயங்க வேண்டும். மற்ற துறைகளும் இணைந்தால் தீர்வை எட்டலாம்.

- மரகதம் கடலைக்காரசந்து

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வகுப்பிலேயே, நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும். வாழ்க்கை சிதைந்து போகும் என்பதை வெளிப்படையாக உணர்த்த வேண்டும். அதற்கான முயற்சியை கல்விநிறுவனங்கள் எடுக்க வேண்டும்.

- புவனேஸ்வரி, கலெக்டர் அலுவலகம் அருகில்

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X