மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Objection to burial in cemetery; Officials agree to negotiate    மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு



திட்டக்குடி: திட்டக்குடி அருகே குடியிருப்பு பகுதியின் நடுவிலுள்ள மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகிலுள்ள பழைய கொடிக்களம் பகுதியில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கான மயானம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் அவர்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வந்தனர். தற்போது அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகியுள்ளது. இதனால் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தை சேர்ந்த 75 வயது பெண் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று காலை ஆவினங்குடியில் வசிக்கும் அந்த சமுதாய மக்கள் மயானத்தில் குழி தோண்டுவதற்கு சென்றனர்.

இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர். இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறந்தவரின் உடலை தற்போதுள்ள மயானத்திலேயே அடக்கம் செய்யவும், வரும் காலத்தில் அவர்களுக்கு ஊரின் வெளியே தரிசு நிலத்தில் இடம் ஒதுக்கித் தரவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X