கரூர்: கரூர் அருகே சேதமடைந்துள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்.
கரூர்-திண்டுக்கல் பழைய சாலையில், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரி செயல் படுகிறது. அதே பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், கோவில், ஓட்டல்கள் மற்றும் ஏராளமான குடிருப்புகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், அரசு கலைக் கல்லுாரி எதிரே, பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டன.
அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நிறுத்தி பயணிகள், கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களாக பயணிகள் நிழற்கூடம் சேத மடைந்த நிலையில் உள்ளது.
விளக்குகள், மேல்தளம் உடைந்துள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மழை பெய்து வரும் நிலையில், அரசு கலைக்கல்லுாரி எதிரே சேதமடைந்த நிழற்கூடத்தில் பயணிகள், மாணவ, மாணவியர் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, அரசு கலைக்கல்லுாரி முன், சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.