ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வரும், 12 முதல், 24ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடக்க உள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதாகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 1,45,354 குழந்தைகள் உள்ளனர். இந்த முகாமில் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலம், குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 'சின்க்' மாத்திரை, ஓ.ஆர்.எஸ்., உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட்டு தயாரிக்கும் முறை, பயன்பாடு குறித்து விளக்கப்படும்.பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், கை கழுவுதல் முறை பற்றி விளக்கப்படும். இத்தகவலை மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.