சூறைக்காற்றால் வாழை பலத்த சேதம் இழப்பீடு எதிர்பார்க்கும் விவசாயிகள்
Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் வீசிய பலத்த காற்று மற்றும் மழைக்கு, 334 ஏக்கர் வாழை சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு தொகையை விரைந்து வழங்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பொங்கலுார், உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகள், வாழை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கேரள சந்தைக்காக, நேந்திரம், ரொபெஸ்டா உள்ளிட்ட ஹைபிரிட் வாழை ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று மற்றும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வாழை, பப்பாளி, முருங்கை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் ஏராளமாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக காசிபாளையம், அவிநாசி, முதலிபாளையம், அவிநாசிபாளையம், மடத்துக்குளம், உடுமலை பகுதி வாழை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீசிய காற்று மற்றும் மழைக்கு, 250 வாழை விவசாயிகளின் 252 ஏக்கர் பரப்பு வாழை; மே மாதம் இறுதியில் பெய்த மழைக்கு, 89 விவசாயிகளின், 82 ஏக்கர் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் வீசிய பலத்த காற்று மற்றும் கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், 334 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 339 வாழை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறையால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பேரிடர் நிவாரண நிதி மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்ப உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X