ஜாமினில் வந்த தொழிலாளி கொலை வெள்ளகோவில் அருகே ஒருவர் கைது
Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஜாமினில் வந்த தொழிலாளி, கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.

வெள்ளகோவில் அருகே சின்னகவுண்டன்வலசை சேர்ந்த கூலி தொழிலாளி மோகனசுந்தரம், 43; குழந்தைகளுடன் மனைவி சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதால், மோகனசுந்தரம் தனது தாயாருடன் வசித்தார்.
மோகனசுந்தரம் குடும்பத்துக்கும், அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி சம்பூர்ணம் குடும்பத்துக்கும் இட பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனசுந்தரம், நிபந்தனை ஜாமீனில் கடந்த மாதம், 7ம் தேதி ஜாமினில் வந்தார். நேற்று முன்தினம் முத்துார்-வரட்டுகரை கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகே மோகனசுந்தரம் பிணமாக கிடந்தார். வெள்ளகோவில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இது தொடர்பான 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, சம்பூர்ணத்தின் மகன் அன்பு குமார், ௩௫, என்பவரிடம் விசாரித்தனர். இதில் மோகன சுந்தரத்தை காரில் கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மூன்று நாட்களுக்கு முன் மோகனசுந்தரத்துக்கும், சம்பூரணத்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சம்பூரணம் வீட்டுக்கு செல்லும் குடிநீர் குழாயை, மோகனசுந்தரம் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பூரணத்தின் மகன் அன்புகுமார், உறவினர் பிரவீன்குமார், 32; முத்துாரை சேர்ந்த நண்பர்களான சுரேஷ், 36, குப்புராஜ், 40, ஆகியோருடன் சேர்ந்து, மோகனசுந்தரத்தை காரில் கடத்தி சென்றுள்ளனர். முத்துாரில் ஒரு லேத் பட்டறையில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கியதில், அவர் இறந்துள்ளார். இதையடுத்து கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் சடலத்தை போட்டு சென்றுள்ளனர். கொலை வழக்கு பதிந்து அன்புகுமார் கைது செய்யப்பட்டார். மற்ற மூவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X