சில்லறை தகராறில் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்
Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Brutal assault on conductor in retail dispute  சில்லறை தகராறில் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பேருந்தில் பயணம் செய்த சேத்துரைச் சேர்ந்த ராஜி என்பவருக்கும் பேருந்து நடத்துனர் மோகன் என்பவருக்கும் சில்லறை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ் தனது குடும்பத்தினருடன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.
பேருந்து கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் சீர்காழி வரும் பொழுது ராஜ் அவரது ஆதரவாளர்களுடன் சேத்தூர் அருகே மண்ணிபள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களுடன் பேருந்து முன்புறம் நிறுத்தி பேருந்தை மறித்து உள்ளே ஏறி நடத்துனர் மோகனை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை கீழே இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து காயமடைந்த நடத்துனர் மோகன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பேருந்து நிர்வாகம் சார்பில் மணல்மேடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது நடத்துனரை பலர் சேர்ந்து தாக்கும் கொடூர தாக்குதல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
Raa - Chennai,இந்தியா
12-ஜூன்-202312:20:16 IST Report Abuse
Raa பஸ் டிக்கெட் வாங்க, gPay போர்டு வைத்து சிம்பிளா முடிக்கலமே
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202312:31:50 IST Report Abuse
ranjani பஸ்ஸின் உள்ள தகராறில் யார் சரி யார் தப்பு என்று கூற இந்த பதிவை இடவில்லை. ஆனால் 10 பேரை வரவழைத்து என்பது திட்டமிட்ட வன்முறை. இது நசுக்கப்பட வேண்டியது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஜூன்-202321:07:23 IST Report Abuse
Ramesh Sargam அரசு வாகனம், தனியார் வாகனம் என்று எல்லா வாகனங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தினால், இது போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்த வேண்டும். நான் சில இடங்களில் பார்த்தேன், தெருவில் பிச்சை (யாசகம்) செய்பவர்களே Google Pay, Phone Pe scanner -களை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும்போது, பேருந்து நடத்துபவர்கள் ஏன் அந்த முறையை அறிமுகம் செய்யக்கூடாது. யோசியங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X