ரூ.80 கோடி மதிப்பிலான 3.3 ஏக்கர் நிலம் மீட்பு
Added : ஜூன் 11, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Recovery of 3.3 acres of land worth Rs.80 crore   ரூ.80 கோடி மதிப்பிலான 3.3 ஏக்கர் நிலம் மீட்பு



மணலியில் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் மாநகராட்சியினரால் இடித்து அகற்றப்பட்டது.

திருவொற்றியூர், ஜூன் 11-

மணலியில் தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த, 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

மணலி மண்டலம் 18வது வார்டு, சி.பி.சி.எல்., நகர் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம், மயானம், வாய்க்கால் மற்றும் வண்டிப்பாதை நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த புகாரையடுத்து, அதிகாரிகள் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஆக்கிரமிப்பிற்குள்ளான நிலங்களை மீட்க உத்தரவிட்டார்.

உத்தரவின்படி, மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரம் உள்ளிட்டவற்றுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக சுற்றுச்சுவரை இடித்து தள்ளி, 3.3 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

இந்த நிலத்தின் மதிப்பு, 80 கோடி ரூபாய்.

மீட்கப்பட்ட இடத்தில் 30 அடி அகலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X