சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், அரக்கோணம் தடத்தில், 11 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே இன்று, 12, 13, 14ம் தேதிகளில் ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதையொட்டி, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
• இன்றும், 13ம் தேதியும், சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:35 மணி ரயில், சென்ட்ரல் - ஆவடி இரவு 11:30 மணி ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 11:55 மணி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன
• வரும் 12ம் தேதி, சென்னை கடற்கரை - அரக்கோணம் அதிகாலை 1:20 மணி ரயில், சென்ட்ரல் - திருவள்ளூர் அதிகாலை 5:40 மணி ரயில், ஆவடி - சென்ட்ரல் அதிகாலை 3:40 மணி ரயில், திருவள்ளூர் - சென்ட்ரல் அதிகாலை 4:45 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் அதிகாலை 5:30 மணி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
• சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் அதிகாலை 4;15 மணி ரயில் வரும் 12, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன
• பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் அதிகாலை 3:20 மணி, ஆவடி - சென்ட்ரல் அதிகாலை 4:00 மணி ரயில்கள், வரும் 14ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
• பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில் இன்றும், 13ம் தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்
• சென்ட்ரல் - திருவள்ளூர் அதிகாலை 3:50 மணி ரயில், வரும் 14ம் தேதி, ஆவடியில் இருந்து இயக்கப்படும்
• சென்ட்ரல் - திருவள்ளூர் அதிகாலை 4:30 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும். அரக்கோணம் - வேளச்சேரி அதிகாலை 4:00 மணி ரயில், வரும் 12ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
• திருத்தணி - சென்ட்ரல் இரவு 9:45 மணி ரயில், அரக்கோணம் - சென்ட்ரல் இரவு 9:45 மணி ரயில் இன்றும், 13ம் தேதி சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும்
• சென்ட்ரல் - ஆவடி இரவு 11:45 மணி ரயில் இன்றும், 13ம் தேதியிலும் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.