அதிகாரிகள் இல்லாமல் குறை தீர்க்கும் கூட்டம் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொதுமக்கள்
Added : ஜூன் 11, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 The grievance redressal meeting without officers was a disillusioned public going back   அதிகாரிகள் இல்லாமல் குறை தீர்க்கும் கூட்டம் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொதுமக்கள்



சோழிங்கநல்லுார், குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், அந்தந்த மண்டல பகுதி பொறியாளர் அலுவலகத்தில், வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் நடைபெறும்.

இதில், குடிநீர், கழிவுநீர் பிரச்னை, வரி, கட்டணம் சந்தேகங்கள், புதிய இணைப்பு கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், மழைநீர் சேகரிப்பு, பராமரிப்பு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படும். பொதுமக்கள் மனு கொடுத்து, நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பர்.

சோழிங்கநல்லுார் குடிநீர் வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், நீலாங்கரை, செம்மஞ்சேரி பகுதியில் இருந்து, நலச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடினர்.

காலை, 10:00 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம், 11:45 மணி வரை துவங்கவில்லை. அங்குள்ள ஊழியர்கள் முறையான பதிலும் கூறவில்லை. வெளியே காத்திருந்தவர்கள், சரமாரியாக கேள்வி எழுப்பியதை அடுத்து, பகுதி பொறியாளர் அலுவலக அறையில் அனைவரையும் அமர வைத்தனர்.

ஆனால், கூட்டத்தை நடத்த கண்காணிப்பு பொறியாளர், பகுதி பொறியாளர், உதவி பகுதி பொறியாளர்கள் இல்லை.

அவர்கள், மொபைல் போனில் தொடர்பு கொண்டும் பேசவில்லை. பொறுமை இழந்த மக்கள், அங்கிருந்த ஊழியர்களிடம், 'எதற்கு குறை தீர்க்கும் கூட்டம் என அறிவிப்பு கொடுத்தீர்கள்?' என, கேள்வி எழுப்பினர்.

பின், சில வார்டு இளநிலை பொறியாளர்களை வரவழைத்து, பொதுமக்கள் வைத்திருந்த மனுக்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கலப்பு, கட்டணம் தொடர்பாக மனு அளித்தும், உரிய பதில் கிடைக்காததால், குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என, நம்பி வந்தோம். கூட்டம் நடத்தும் அதிகாரிகள் இல்லை. உரிய பதிலும் கூறவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், எங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிக்காக அதிகாரிகளும் உடன் சென்றிருந்ததால், கூட்டத்துக்கு வர முடியவில்லை,'' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X