இந்தா பிடிங்க ரூ.5.48 கோடி: நிலுவை பி.எப்., தொகையை வழங்கியது மாநகராட்சி
Added : செப் 18, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Inda Bidinga Rs.5.48 Crores: The Corporation disbursed the outstanding P.F    இந்தா பிடிங்க ரூ.5.48 கோடி:  நிலுவை பி.எப்., தொகையை வழங்கியது மாநகராட்சி

மதுரை- தினமலர் செய்தி எதிரொலியாக ஆசிரியர்கள், அலுவலர்களின் நிலுவை பி.எப்., தொகை ரூ.5 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரத்து 349 ஐ மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கியில் மாநகராட்சி செலுத்தியது. இதனால் ஆசிரியர்கள் அறிவித்திருந்த தொடர் போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மாநகராட்சி ஆசிரியர்கள், அலுவலர்களிடம் 1990, ஏப்.,1 முதல் 2019, மார்ச் 31 வரை 29 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., தொகை ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815. இதை மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்தாமல் இழுத்தடித்தது.

ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் முதற்கட்டமாக 2027ல் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ரூ.10 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 295 ஐ மாநில கணக்காயர் அலுவலர் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்தியது.

அதை தொடர்ந்து ரூ.9 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 520 நிலுவைத் தொகையை வழங்காமல் மீண்டும் மாநகராட்சி மவுனம் காத்து வந்தது. இதனால் பணப்பலனை அனுபவிக்க முடியாமல் தவிப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டின.

மேலும் நிலுவை பி.எப்., தொகை வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது.

இதன் எதிரொலியாக 92 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடியே 70 லட்சத்து 12 ஆயிரத்து 536ம், 35 அலுவலர்களுக்கு ரூ.1 கோடி 78 லட்சத்து 43 ஆயிரத்து 813ஐ மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கிகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், அலுவலர்களின் பெயரில் வரவு வைக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு நிதி காப்பாளர் சீனிவாசன் கூறுகையில், ''நிலுவை பி.எப்., தொகையை வழங்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், துணை கமிஷனர் சரவணன், கணக்கு பிரிவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதனால் அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலுவை பி.எப்., தொகையையும் விரைவில் வழங்க கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X