சம்பா பட்டத்தில், இயற்கைஉரங்களான, அவுரி, சணப்பை, தக்கை பூண்டு ஆகியவற்றை பயன்படுத்தி, பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம்,
திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய தாலுகாவில், பாலாற்று நீர் மற்றும்
கிணற்று நீரை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகள், தற்போது, சம்பா
பட்டத்தில், பயிர் செய்ய தயாராகி வருகின்றனர். இதற்காக, வெள்ளை பொன்னி,
பாபட்லா ஆகிய நெல் விதைகளை, வேளாண்மை துறை அலுவலகங்களிலிருந்து பெற்று,
நாற்று விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை உரம் செம்மை
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நாற்று விட்ட, 18 நாட்களில், நடவு
செய்வதற்காக, நிலங்களை தயார் செய்து வருகின்றனர். இதற்காக, பசுந்தாள்
உரங்களான அவுரி, சணப்பை, தக்கை பூண்டு போன்றவற்றை விதைத்து வளர்த்து
உள்ளனர். இயற்கையாக, மண்ணிற்கு தேவையான தழைச்சத்து கிடைப்பதால், ரசாயன
உரத்தின் பயன்பாடு மற்றும் செலவு குறைகிறது.கூடுதல் மகசூல் இதுகுறித்து,
மணப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராமானுஜம் கூறுகையில், ""கடந்த
ஆண்டு மாவட்டத்தில் அதிகமாக நெல் உற்பத்தி செய்ததற்காக, முதல் பரிசை
பெற்றேன். இந்த ஆண்டு, சம்பா பருவத்தில், பயிர் செய்வதற்காக, 10 ஏக்கர்
நிலத்தில், அவுரி, சணப்பை ஆகியவற்றை வளர்த்துள்ளேன். இதன் மூலம் கூடுதல்
மகசூல் கிடைக்கும். நடவு செய்வதற்கு நாற்று விட்டுள்ளேன். இந்த ஆண்டும்,
முதல் பரிசை பெறுவதற்கு முயற்சி செய்துவருகிறேன். இம்மாதம், பரவலாக மழை
பெய்து வருவதால், கிணறு, ஆழ்துளை கிணறு பாசன விவசாயிகள் நெல் பயிர்
செய்வதற்கு, நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.அதிகரிப்புஇதுகுறித்து, வேளாண்மை துறைஅதிகாரி ஒருவர் கூறுகையில்,""மாவட்டத்தில், கடந்த ஆண்டு சம்பா பட்டத்தில், 1 லட்சம் ஏக்கரில், நெல்
பயிரிடப்பட்டது.
இந்த ஆண்டு, 1.25 லட்சம் ஏக்கரில், நெல் பயிரிடப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இயற்கை உரங்களை பயன்படுத்துவதில்,
விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்,'' என்றார்.
நமது நிருபர் குழு