அரசு துறை அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறுகிறது அரசு. ஆனால், கோவையில் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட வேலைகளை செய்து தர, புரோக்கர்கள் ஆபீஸ் திறந்து, தடாலடியாக விளம்பரமும் செய்துள்ளனர்.
மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் பணிகளை, மாவட்ட வழங்கல் அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் "உதவி பங்கீட்டு அலுவலர்' அலுவலகங்கள், கோவை வடக்கு மற்றும் தெற்கு தாசில்தார் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிய ரேஷன் கார்டுக்கு விண் ணப்பம் அளித்தல், முகவரி மாற் றம், பெயர் சேர்ப்பு உள்ளிட்ட ரேஷன் தொடர்பான பல்வேறு பணிகளை, உதவி பங்கீட்டு அலுவலர் அலுவலகங்கள் கவனிக் கின்றன. இதற்காக, தினமும் ஏராளமான மக்கள், இந்த அலுவலக பணியாளர்களை அணுகி வருகின்றனர். போதிய கல்வியறிவு இல்லாதோர், தங்களது கோரிக்கை தொடர் பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும், ஆபீசில் யாரை அணுகுவது, என்ற விபரம் தெரியாமல் தவிக்கின்றனர்.
இவர்களின் தவிப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றும் புரோக் கர்கள், தாலுகா அலுவலக வளாகத் தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தங்களிடம் உள்ள விண்ணப் பத்தை விலைக்கு விற்று, பூர்த்தி செய்து தருகின்றனர்; இதற்கு, விண்ணப்பத்துக்கு இவ்வளவு என "ரேட்' நிர்ணயித்து கறந்து விடுகின்றனர். ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு தொடர்பான விண்ணப்பத் துக்கு 25 ரூபாயும், புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பத்துக்கு 30 ரூபாயும் வசூலித்துக் கொள்கின்றனர். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், "ஒரு விண்ணப்பத்துக்கு 10 ரூபாய் வரை செலவிட்டு வாங்குகிறோம்; அதை பூர்த்தி செய்து கொடுக்க, கொஞ்சம் சேர்த்து வசூல் செய்கிறோம்' என சர்வசாதாரணமாக கூறுகின்றனர்.
ரேஷன் பெயரில் இவ்வாறான வசூல் வேட்டை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ புரோக்கர்கள் சிலர் "ஹைடெக்காக' தொழிலை மாற்றி ஆபீஸ் திறந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்."ரேஷன் கார்டு வேண்டுமா, எங்களை அணுகுங்க!' என்று நகரில் பல இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி, நோட்டீஸ் வழங்கி வெளிப்படையாகவே விளம்பரம் செய்துள்ளனர். தவிர, தெருவிலுள்ள மரங்கள், மின் கம்பங்களில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அவற்றில் சில மொபைல் போன் எண்கள், புரோக்கர் அலுவலக முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:ரேஷன் கார்டில் என்ன பிரச்னை? முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், கார்டு மிஸ்ஸிங், கார்டு கேன்சல், புதிய கார்டு பெற எங்களை அணுகலாம். மேலும், சாதிச் சான்று, வாரிசுச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, திருமணம் பதிவு செய்தல் போன்ற அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நாட்களாக திரைமறைவில் மட்டுமே செயல்பட்டு வந்த புரோக்கர்கள், தற்போது வெளிப்படையாகவே ஆபீஸ் திறந்து, அப்பாவி மக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளதை, அரசுத் துறை அதிகாரிகளும் பார்த்தபடி செல்கின்றனர்; இவர்களுக்கு இப்படியொரு தொழிலை நடத்த லைசென்ஸ் யார் கொடுத்தது? இது சட்டவிதிகளை மீறிய செயல் ஆகாதா? என்ற கேள்விகள் எதுவும் அதிகாரிகளின் மனதில் எழாதது வியப்பாக உள்ளது.இப்படி பகிரங்கமாக நோட் டீஸ் அச்சடித்து, "பிசினஸாகவே' தொழில் செய்யும் அளவுக்கு இவர்களுக்கு ஊக்கமளித்தது சம் மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந் துள்ளது. இது போன்ற முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிடில், அரசுத் துறைகளின் அனைத்து விதமான வேலைகளுக்கும் "ஆபீஸ் போட்டு' புரோக்கர்கள் களமிறங்கிவிடும் அபாயம் நிலவுகிறது.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து |
![]() நானும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.., புதியதாக திருமணம் ஆனதிற்கு உண்டான சான்றிதழ்கள் அனைத்தும் கொடுத்து ஆகி விட்டது.., பழைய குடும்ப அட்டையில் இருந்து நீக்குதல் மற்றும் புதிய அட்டைக்கு உண்டான ஆவணங்கள் அனைத்தும் கொடுத்து விட்டேன்....., இன்னும் எனக்கு புதிய குடும்ப அட்டை கொடுப்பதற்கு எந்த உத்தரவும வர வில்லை..., மாண்புமிகு அமைச்சர் எ வ வேலு வவுக்கு தான் தெரியும்.., புதிய் குடும்ப அட்டை எப்போது மக்களுக்கு சென்றடையும் என்று.., ![]() |
by jk keerthi,india,India 01-11-2009 00:08:51 IST |
![]() ![]() |
by R Ramesh,salem,India 31-10-2009 18:41:17 IST |
![]() ![]() |
by V அசோக் Kumar,HoChiMinh,Vietnam 31-10-2009 17:59:19 IST |
![]() ![]() |
by r rajesh,South Africa,South Africa 31-10-2009 17:02:15 IST |
![]() ![]() |
by K.H. JAILANI,sharjah,United Arab Emirates 31-10-2009 16:41:41 IST |
![]() ஓம்னி பஸ்கள் எப்படி இயங்க வேண்டும், எப்படி இயங்குகிறது என்றெல்லாம் அரசுக்கு தெரியாமலா அவர்கள் ''தினசரி சர்வீசுகள்'' என்று எழுதி வைத்து புக்கிங் செய்து பஸ்களை இயக்குகிறார்கள்? இது அநியாயமில்லையா? விதிமுறைகளுக்கு முரணானது இல்லையா? இப்படி எத்தனையோ சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள் நாட்டில் சகஜம். இதுவும் அதில் ஒன்றுதான். மக்களுக்கும் வசதி. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் வருமானம். உங்களுக்கு ஏன் கவலை? ![]() |
by Mr Yila,Nellai,India 31-10-2009 15:36:48 IST |
![]() பாவம் சாமானியன் ... ![]() |
by Prabu,sg,Singapore 31-10-2009 15:22:53 IST |
![]() சரில்லை இதனால் தான் இப்படி அரசு துறை அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம். முதலில் அரசு அதிகாரி துணை இல்லாமல் பங்கு இல்லாம் இதுபோல செய்ய முடியமா? இதில் என்ன கொடுமை என்றால் போலி கார்டுகளுக்கு தான் பரிசோதனை. ஆனா இப்போ புரோக்கர்களின் ஆதிக்கம் இருப்பதால் மீண்டும் போலிகார்டுகள் கிடைக்கத் தான் போகிறது.ஏன் தேவை இல்லாத வேலை.இந்த அரசுக்கு போலி கார்டுகள் பரிசோதனை என போலி நாடகம்............ ![]() |
by kalai raja,trichy,India 31-10-2009 15:08:00 IST |
![]() ![]() |
by N ulaganathan,THOOTHUKUDI,India 31-10-2009 14:59:50 IST |
![]() ![]() |
by v parthipan,chennai,India 31-10-2009 14:41:57 IST |
![]() ![]() |
by Bharathi,Tamilnadu,India 31-10-2009 13:48:37 IST |
![]() ![]() |
by P mativathanan,chennai,India 31-10-2009 13:22:32 IST |
![]() ![]() |
by Mr Bala,India,India 31-10-2009 13:14:56 IST |
![]() லீவ் போட்டு அலையுறவங்களுக்குதான் சார் ஒரு சான்று வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு புரியும். அரசு அலுவலகங்கள்ல ஒரு பணியை தாமதமாக்கினா எதனாலன்னு காரணம் சொல்லணும்னு சட்டம் போட்டாதான் இது போன்ற நிலைகளை கொஞ்சமாவது தவிர்க்கலாம். ![]() |
by வெங்கி,Thiruvarur,India 31-10-2009 12:57:02 IST |
![]() ![]() |
by Selvaraju Kanagarajan,Kalmar,Sweden 31-10-2009 12:50:42 IST |
![]() ![]() |
by MP Vijayakumar,Bangalore,India 31-10-2009 12:35:52 IST |
![]() ![]() |
by M Akilan,Salem,India 31-10-2009 12:03:02 IST |
![]() ![]() |
by b jeganathan,dindigul,India 31-10-2009 11:53:42 IST |
![]() அரசு ஆவண செய்யுமா?????? ![]() |
by D மணிகண்டன்,Tamilnadu ,India 31-10-2009 11:50:39 IST |
![]() ![]() |
by A DENNIS,Coimbatore,India 31-10-2009 11:41:27 IST |
![]() ![]() |
by n murugan,COIMBATORE,India 31-10-2009 11:08:19 IST |
![]() ![]() |
by p chand,Chennai,India 31-10-2009 10:23:06 IST |
![]() RTO office லும் இதே பிரச்னை தான் . இரண்டு நாட்களில் ஒரு வேலை முடியும் என போர்டு மாட்டி வைத்திருப்பார்கள் . ஆனால் பேப்பர் எல்லாம் கொடுத்து பத்து முறை அலைந்தால் தான் வேலை நடக்கும்......... ![]() |
by T பேச்சிமுத்து,chennai,India 31-10-2009 10:13:20 IST |
![]() raja/usa. ![]() |
by T.K raja kumar,pharma..,United States 31-10-2009 10:06:08 IST |
![]() ![]() |
by A சந்தானம்,karur,India 31-10-2009 10:06:00 IST |
![]() 1) Profit for Govt 2) Time saved for public ![]() |
by Jeyapandian Balakrishnan,Singapore,Singapore 31-10-2009 09:56:55 IST |
![]() ~ nag ![]() |
by C nagarjuna,Wheeling,United States 31-10-2009 08:57:40 IST |
![]() ![]() |
by S சுப்பன் ,Chennai,India 31-10-2009 08:46:25 IST |
![]() ![]() |
by T சஞ்சய் தமிழ்,bangalore,India 31-10-2009 08:34:57 IST |
![]() ![]() |
by P Sundar,singapore,India 31-10-2009 08:34:34 IST |
![]() ![]() |
by R Suresh,CBE,India 31-10-2009 08:02:09 IST |
![]() ![]() |
by P Santhosh,Pan Yu, Guangzhou,China 31-10-2009 06:53:38 IST |
![]() ![]() |
by ராம் எஸ் அய்யர் ,Sinagpore ,Singapore 31-10-2009 05:39:23 IST |
![]() ![]() |
by வெங்கி,Thiruvarur,India 31-10-2009 05:23:20 IST |
![]() ![]() |
by V சுப்ப ராவ் ,Singapore,India 31-10-2009 05:09:57 IST |
![]() ![]() |
by I Thiruvalluvan,chennai,India 31-10-2009 03:17:33 IST |