சென்னை : பெண்களுக்கான தற்காப்பு பயிற்சியை வழங்க சென்னை போலீசார் முடிவு செய்துள் ளனர்.வீடு, வேலை செய்யும் இடம், பயணம் செய்யும்நேரம் ஆகிய சந்தர்ப்பங்களில், பெண்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர் பான கலந்தாய்வுக் கூட்டம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பேசியதாவது:மற்ற ஊர்களில் பஸ்சில் பெண்கள் முன்பகுதியிலும், ஆண்கள் பின்பகுதியிலும் ஏறி, இறங்குகின்றனர். அதே முறையை, சென்னையில் கொண்டு வர வேண்டும். சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளபடி, விசாகா கமிட்டி அமைப்பது குறித்து அனைத்து அலுவலகங்களிலும் விழிப்புணர்வு போஸ்டர் வைக்க வேண்டும்.கமிட்டியில் நியமிக்கப் பட்ட உறுப்பினர்களில், பலர் ஓய்வுபெற்று, வேறு இடங் களுக்கும் சென்று விட்டனர்.இதனால், கமிட்டி முழுமையாக செயல்படாமல் உள்ளது. கமிட்டியை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான தற்காப்புப் பயிற்சிகளை போலீசார் அளிக்க வேண்டும்.இவ்வாறு, பெண்கள் பேசினர்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பேசியதாவது:வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி கொள்ளையடிப்பது தொடர்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.வியூ பைண்டர், கதவு செயின், கிரில் கேட் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நகை பாலீஷ், தெருவில் கலவரம் எனக் கூறி பெண் களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றனர். வீட்டில் உள்ள தந்தை, கணவர்களுக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 30 சதவீதம் வீட்டில் தான் நடக்கிறது.
ஆபாச படங்களை காட்டுவது, ஆபாச ஜோக் சொல்வது, ஆபாச புத்தகங்களை கொடுப்பது, தவறான எண்ணத்துடன் தொட்டு பழகுவது என அலுவலகத்தில் பெண்களுக்கு பல செக்ஸ் தொந்தரவுகள் வரலாம்.இது குறித்து, முதலில் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட்டின் 1998ம் ஆண்டு தீர்ப்புப்படி, ஒவ் வொரு அலுவலகத்திலும் பெண் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.இதில் வக்கீல், போலீஸ், பெண்கள் சங்க பிரதிநிதி இடம்பெற வேண்டும். விசாகா கமிட்டி முழுமையாக செயல் படாதது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல் வோம்.
யாராவது உங்களைத் தாக்க வந்தால், குடை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் திருப்பித் தாக்குங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உங்களுக்கு உரிமை உண்டு. பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான தற்காப்பு பயிற்சியை போலீசார் வழங்குவர். குற்ற ஆவணங்கள் பிரிவு உதவிக் கமிஷனர் முத்தரசி தலைமையில் இப்பயிற்சி வழங்கப் படும்.ஆட்டோவில் ஏறும்முன், அதன் எண்ணை குறித்து கொள்ளுங்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பகலிலும் செக்யூரிட்டி பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு, ராஜேந்திரன் பேசினார்.
தென்சென்னை இணை கமிஷனர் சக்திவேல் பேசும் போது, ""நடந்து செல்லும் போது மொபைல்போன் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என கவனியுங்கள்,'' என்றார்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by mr dharmaraj,hounslow,United Kingdom 31-12-2009 15:31:08 IST |
![]() ![]() |
by s JOHNCHRISTOPHER,L,India 31-12-2009 14:07:07 IST |
![]() சினிமா படங்கள் எல்லாமே வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்ககுடியதவே உள்ளது. சிறுவர்கடகும் 18 வயசு நிரம்பாத பிள்ளைகள் பார்ப்பதை தவிகவேண்டும் தமிழ் சினிமா படங்கள் கிரிமினல் வேலை செய்ய தூண்டுகின்றது அமெரிக்காவில் போல தில் சினிமா ரெண்டு பகுதியா அடலஸ் ஒன்லி சாதாரண சினிமா எனபிரிகவேன்டும் தமிழ் சினிமா படங்கள் எல்லாமே கிரிமினல் செய்ய தூண்டும் போல இருக்கு ௧௦௦ ![]() |
by T Sivanathan,Chennai,India 31-12-2009 13:31:37 IST |
![]() தன்னை துன்புறுத்துவோரை தாக்கி (உயிருக்கு பாதிப்பு இல்லாமல்) தன் உய்ரையும் மானத்தையும் காத்துகொண்டு தப்பிபதற்கு பெயர்தான் தற்காப்பு. ஆனால் இந்த தற்காப்பையும் பெண்கள் தவறாக பயன்படுத்தி நல்ல ஆடவருக்கு களங்கம் உண்டாக்கிவிடகூடது. காவல்துறை மட்டும், தனது கடமையே பாரபட்சம் பார்க்காமல் அரசியல்வாதி செல்வந்தர்களுக்கு பயப்படாமல் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தினால் , பெண்களுக்கு எதிரான வன்முறை மட்டும் இல்லை,நிறைய குற்றங்கள் குறைந்துவிடும். அதற்க்கு, ஆரோக்கியமான அரசியல் அமைப்பு தமிழகத்தை ஆளவேண்டும். இந்த திராவிட கழகங்களும், சினிமா அரசியல்வாதிகளும் ஒழியும் வரை இந்த நாடு இப்படிதான் இருக்கும். ![]() |
by A ஜீவா ,Maldives,India 31-12-2009 12:57:39 IST |
![]() ![]() |
by a anuradha,Chennai,India 31-12-2009 12:38:04 IST |
![]() ![]() |
by munees,tirupur,India 31-12-2009 11:28:47 IST |
![]() சகோதரிகளே அன்புடன் சிவகங்கை சீமை முருக்கப்பட்டி ந.பெரியசாமி ![]() |
by na பெரியசாமி,thendralnagar.trichy.21,India 31-12-2009 11:21:54 IST |
![]() ![]() |
by K JEEVITHAN,villupuram,India 31-12-2009 11:19:01 IST |
![]() ![]() |
by M தங்கவேல்,Chennai,India 31-12-2009 11:03:52 IST |
![]() ![]() |
by J லியோ,paramakudi,India 31-12-2009 10:18:10 IST |
![]() ![]() |
by p dineshkumar,chennai,India 31-12-2009 10:11:14 IST |
![]() ![]() |
by p shiva,chennai,India 31-12-2009 09:51:00 IST |
![]() ![]() |
by A samy,singapore,India 31-12-2009 09:14:38 IST |
![]() சா.முகம்மது அபுபக்கர்,துபாய் ![]() |
by S Mohamed Abubucker,Dubai,United Arab Emirates 31-12-2009 09:01:28 IST |
![]() ![]() |
by nila mdu,madurai,India 31-12-2009 08:25:27 IST |
![]() ![]() |
by s prakash,vellore,India 31-12-2009 04:49:09 IST |
![]() ![]() |
by I Thiruvalluvan,Chennai,India 31-12-2009 03:37:20 IST |
![]() ![]() |
by J Rajamohamed,Riyadh,Saudi Arabia 31-12-2009 01:33:28 IST |