முதல் பக்க செய்திகள் 

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 10 கிலோ அரிசி : 2 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு
ஜனவரி 22,2010,00:00  IST

Front page news and headlines today

பருப்பு, சர்க்கரை, உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றின் விலை குறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது. அதனால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி மற்றும் கோதுமை கூடுதலாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.





பால் உற்பத்தி விலையை அதிகரிக்கவில்லை எனில், வட மாநிலங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என, மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. "சரத் பவாரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, உ.பி., முதல்வர் மாயாவதியும் தெரிவித்தார். அதேபோல, பா.ஜ., மூத்த தலைவர்களும், நிதின் கட்காரி தலைமையில் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். இரண்டு வாரம் கூட முடியாத நிலையில், விலைவாசி குறித்து ஆராய மத்திய அமைச்சரவைக் கூட்டம், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மீண்டும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பருப்பு, சர்க்கரை, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய நான்கு உணவுப் பொருட்களின் விலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.





பின்னர் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: விலைவாசி உயர்வை குறைப்பதற்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத கோட்டாவாக கூடுதலாக 10 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படும். தற்போது, தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் 35 கிலோ அரிசி மற்றும் கோதுமைக்கு மேலாக இது வழங்கப்படும். இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து 10.64 லட்சம் டன் அரிசியும், 25.43 லட்சம் டன் கோதுமையும் வழங்கப்படும். இதை மாநில அரசுகள் மார்ச் மாத இறுதிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதலாக வழங்கப்படும் 10 கிலோ அரிசி மற்றும் கோதுமை, கிலோவுக்கு ரூ.15.37 மற்றும் ரூ.10.80 என்ற விலையில் வழங்கப்படும்.





அந்த்யோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியானது, கிலோ மூன்று ரூபாய் விலையிலும், கோதுமை இரண்டு ரூபாய் விலையிலும் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொது வினியோக முறையில் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமையின் அளவை அதிகரித்ததோடு, சில்லரை சந்தையில் உணவு தானியங்கள் போதிய அளவில் கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "நபெட்' மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம், தங்களின் சில்லரை விற்பனை கடைகள் மூலம், 70 ஆயிரத்து 84 டன் கோதுமை மற்றும் 28 ஆயிரம் டன் அரிசி விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.





                                                                                                  - நமது டில்லி நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நடுவண் அரசு கவலை தெரிவித்து என்ன உபயோகம். சாட்டை அதன் கையில் அல்லவா இருக்கிறது.  
by Mr சிதம்பர பிரபு,Ranchi,India    22-01-2010 16:43:53 IST
 முதலில் ரேஷன் கடையில் ஒவ்வார் மாசமும் எவளவு பொருள் விநியோக்கிக்க வேண்டும் என்பதை கடைகளில் குறிப்பிட வேண்டும் ஏனென்றால் ரேஷன் கடைகளில் அந்த மாதங்களில் முதலிலே பொருகள் கேட்டால் இல்லை என்ற பதிலே வருகிறது எங்கு புகார் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்,,,,, எனது ஒவ்வரு மாதமும் தொடர்கிறது........ 
by p பரமேஸ்வரி,coimbatore,India    22-01-2010 13:47:51 IST
 இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியே வராதா!! இந்த மத்திய அரசும் மாநில அரசு சேர்ந்து கொண்டு நல்ல கூத்தடிக்கிற குடும்ப அரசியல்!! இந்திய மக்களுக்கு, இலவசமும், மலிவு விலையும் கிடைத்தால் போதும், நாட்டில் நடப்பது பற்றி கவலைப்படவே மாட்டார்கள்! இப்படி எத்தனை காலம்தான் ஏமாற்றுவான் இந்த நாட்டிலே !! இந்த இரு கோஷ்டியையும் ஒரே ராக்கெட்டில் ஏற்றி, ஒசாமா பின் லாடனை அழைக்கவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!
என்ன எதாவது புரிகிறதா இந்திய மக்களே !!!!!!!!!!!!!!!!! 
by G மாதவன்,Chennai,India    22-01-2010 13:28:53 IST
 What is their intension? price of vegitable & pulse raised sky high, if they give exra 10 of rice and & wheat, what people will do with the extra rice and wheat?

whether govt. expect the people to sell the extra rice and wheat in black market to make money to but other costly food items?

N Dhanasekar
 
by N Dhanasekar,Bhopal,India    22-01-2010 12:37:28 IST
 மக்களே விழித்துக்கொள்ளுங்கள் நம்மை அடுத்த மொட்டை அடிக்க தயாராகிவிட்டார்கள் அதோட அஸ்திவாரம்தான் 10கிலோ அரிசியும் கோதுமையும். 
by பாஷின்,tanjore,India    22-01-2010 11:20:39 IST
 Govt will not think about how to improver our agriculature example i will tell you in our area Ariyakudi near karaikudi in Sivagangai dist the area is full of agriculture in that place one Minaral water company is there think about this minaral water company they will not extract water only from there land the water from total surrondings is extracted and supply to other district to earn one man all farmer lose there water and lose of agriculture for the govt also but the same govt given approval for the minaral water company Mr.P .Chindabaram was MP at the time of opening that minaral water company. The second think in chennai you see AARI scheme that means the area which is AARI before they demolish now its full of buildings this is future of our agriculture- Jai Hind 
by H ராமலிங்கம்,Abu dhabi,India    22-01-2010 11:01:04 IST
 பொங்கி பொங்கி சாப்பிட முடியாது . கூழ் காச்சி குடிக்க வேண்டும்



 
by v விஜய்,chennai,India    22-01-2010 10:10:06 IST
 ரேசன் பொருட்களை கடத்துவதை தடுத்தாலே போதும் விலை voyaradu  
by D Mano,Saudi Arabia,India    22-01-2010 09:58:49 IST
 நமது நாட்டில் என்று ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் ஆனதோ அன்றே விடுகலேல்லாம் இட்டிலி கடையாக உரு மாறியது. அது மட்டும் அல்ல அரசு மக்களுக்காக அறிவிக்கப்படும் அணைத்து சலுகய்களும் அறியாமையால் சிறு காசுகளுக்காக வினடிக்கபடுகின்றன இதற்க்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?  
by m gaushikrafi,tiruchy,India    22-01-2010 09:48:17 IST
 இனிமேல் தினமும் அரிசியை மட்டும் பொங்கி பொங்கி சாப்பிடலாம் .பொருளாதார மேதைகள் மட்டும் வித விதமாக சமைத்துச் சாப்பிடும் . 
by K Periyasamy,peravurani,India    22-01-2010 09:04:22 IST
 கவலை மட்டும் அடைந்தால் போதாது உடன் நடவடிக்கை தேவை. ஏற்றுமதி தடை, உற்பத்தி திறன் அதிகரிப்பு மேலும் பல திட்டங்கள் தீட்ட பட வேண்டும். இது வரை பணகரர்களுக்கு மட்டுமே திட்டம் தீட்டிய அரசு அரசியல் வாதிகளின் கமிஷன் வரவை குறைத்து மக்கள் வாழ்வில் கவனம் கொள்ளவேண்டும்  
by t கலைஅரசன்,Chennai,India    22-01-2010 08:47:23 IST
 பிஜபி அறிகை விடுத்தபின் தான் இப்பொழுது மத்திய அரசு அவசர அவசர மகா இதனை செய்கிறது. இல்லையெனில் காங்கிரஸ் கட்சி மக்களை பற்றி ஒருபொழுதும் ஒரு நல்ல காரியத்தை செய்யாது. தினமலர் காங்கிரஸ் எதாவது எதிபோன்று செய்தால் அதனை பெரிசாக பறைசாற்றும்.  
by k தீரன் ,chennai,India    22-01-2010 08:06:10 IST
 THANK YOU. 
by venkat,Tirunelveli,India    22-01-2010 07:46:58 IST
 நியாய விலை கடைகளில் போதுமான அளவு பொருள்கள் வழங்கபடுவதில்லை . ஆனால் நியாய விலை பொருள்கள் கூடுதலான விலைக்கு விர்க்கபடுட்கிறது. இந்த நிலயை மார்திட வேண்டும்.
நன்றி. எ.ம.
வேண்டும்.
 
by am MARIAPPAN,tirunelveli,India    22-01-2010 07:20:41 IST
 பவார்..மந்திரியா..அல்லது பால் உற்பத்தி சங்க தலைவரா..? மந்திரியே தூண்டிவிடுகிறாரே..எவ்ளோப்பா ''''கட்டிங்'''' கிடச்சுது..நல்ல மந்திரி நல்லாவிளங்கும்யா..ஒட்டு போட்ட மஷின்கள் பாவம்யா..
இன்னும் ஒரு வேலை கூழுக்கு துடிக்கும் ஏழை ஜனங்கள கொஞ்சமாவது நினைத்து பாருங்கடா..

இந்த கூடுதல் தான்யங்களை வாங்க சாமான்ய மக்கள்கிட்ட வசதி இருக்குமாய்யா.... 
by P சேகர்,SINAGPORE,Singapore    22-01-2010 04:51:44 IST
 ரேஷன் கடையில் அரிசி குறைவான விலைக்கு கிடைத்தால், நம்மில் சிலர் அதை இங்கு வாங்கி கேரளாவுக்கு விற்று விடுவார்கள்....

வெளி மார்க்கெட்டில் உணவு பொருட்களுக்கு விலையை குறைக்காமல் பெரிய பலன் ஏதும் இராது.... 
by அருண் ராதாகிருஷ்ணன்,Charlotte, NC,United States    22-01-2010 01:55:20 IST
 எங்கள் ஊர் ரேசன் கடையில், கடந்த ஆறு மாதத்தில், சென்ற மாதம் மட்டுமே இரண்டு கிலோ கோதுமை கிடைத்தது. கூடுதலாக ஒதுக்கப்ப்படும் கோதுமை இனி யாருக்கு போகப்போகிறதோ!  
by R Saminathan,Kundadam,India    22-01-2010 00:34:54 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்