முதல் பக்க செய்திகள் 

ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய நினைக்கும் எனது மனம் பெரியது : முதல்வர்
ஜனவரி 22,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : ""ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது, '' என முதல்வர் கருணாநிதி பேசினார்.



சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கூட்டமைப்பு சங்கங்களின் மாநிலத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் சிம்மச்சந்திரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தீபக், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கனிமொழி எம்.பி., சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி பங்கேற்றனர்.



முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து என்னை பாராட்டுவதற்காக இங்கு கூடிய ஊனமுற்றவர்கள் எதையும் எதிர்பார்த்து வரவில்லை. அவர்கள் எனக்கு நன்றியும், பாராட்டையும் விழாவாக எடுத்துள்ளனர். அவர்களது கால் ஊனம் குணமாகி நடந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு கண் பார்வை கிடைத்தால், அதுவே எனக்கு காணக் கிடைக்காத காட்சியாகும். ஊனமுற்றோர் என உங்களை அழைப்பதில் நான் வருத்தம் அடைகிறேன். உங்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்கத்தான் அப்படி பிரிவுபடுத்தி அழைக்கின்றனர். ரோஜா பூவின் காம்பை கிள்ளி விட்டால் அதற்கு மனம் இல்லாமல் போய் விடுமா? அதே போல் தான் கால் இல்லாதவர்கள் வாழ்க்கையிலும் மனம் இல்லாமல் போய் விடாது.



நான் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு கண்ணொளி பெறுவதற்காக அதிகளவில் கண் சிகிச்சை முகாம்களை நடத்துகின்றனர். சென்னை வந்த நான், அப்போதைய சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அன்பழகனிடம் அது குறித்து பேசி, கிராமங்கள் தோறும் கண் சிகிச்சை மையங்கள் நடத்த உத்தரவிட்டேன். அன்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் கண்ணொளி திட்டம். அத்திட்டத்தை அரசு மட்டும் முழுமையான அளவில் செய்து விட முடியாது. மாவட்டந்தோறும் உள்ள பெருமக்கள், பணக்காரர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசின் அத்திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கண்ணொளி சிகிச்சை மையமும், அதற்கான அறுவை சிகிச்சை மையமும், சிறப்பு டாக்டர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஊனமுற்றவர்களின் சிகிச்சைக்காகவும், அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் இந்த அரசு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை ஒதுக்கியுள்ளது. நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பீர்கள் என்றால், அத்தொகையை 1,000 கோடி ரூபாயாக உயர்த்தவும் தயாராக இருக்கிறேன்.



ஊனமுற்றவர்கள் இன்னும் நிறைய கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்னர். அவர்களது கோரிக்கைகள், புதிய சட்டசபை கட்டடத்தில், புதிய பட்ஜெட்டில் இடம் பெறும். ஊனமுற்றவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உள்ளது. அதனால் 2,000 பேர் பயனடைந்துள்ளனர். இலவச பஸ் பயணம், விரைவு பேருந்துகளில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் போன்ற பல சலுகைகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் ஊனமுற்றவர்களின் மேல்படிப்புக்கு செலவு இலவசமாக இந்த அரசு அளிக்கிறது. இந்த வசதியின் மூலம் 206 பேர் பயனடைந்துள்னர். எட்டு லட்சத்து 72 ஆயிரத்து 450 ரூபாய் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 12 மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்வதற்கென விடுதிகளுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



ஊனமுற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறை இருந்தாலும், அவர்களுக்கென சிறப்பு தேர்வாணையம் அமைக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும். ஊனமுற்றவர்களின் 400 பேருக்கு இலவச திருமண திட்டத்தின் எண்ணிக்கையை, ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். கை, கால் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் 400 ரூபாய் உதவித்தொகை பட்டியலில் செவிதிறன் குறைவு, வாய் பேச முடியாதவர்களும் சேர்க்கப்படுவர். ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர இலவச மோட்டார் சைக்கிள் 600 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். ஊனமுற்றவர்கள் 47 பேருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் வழங்கினார். பட்டதாரிகள் ஊனமுற்றோர் சங்க மாநிலத் தலைவர் தங்கம் நன்றி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இவர் நல்லது செய்வார் ஊனமுற்றவர் வாழ்க்கை முடிந்தவுடன்

இது வரைக்கும் எத்தனை ஊனமுற்றவர்களுக்கு வேலை கொடுத்துள்ளார்

ஊனமுற்றவர் வாழ்க்கை கேள்விக்குறிதான் ??? 
by K chinna,salem,India    01-02-2010 10:32:53 IST
 என்ன ஒரு தற்பெருமை!!!. இந்த அளவுக்கு இறங்கனுமா? இத பார்த்தால் சின்ன தம்பி படத்தில பிரபு ''''எனக்கு கல்யாணம்.... எனக்கு கல்யாணம்''''-னு ஓடற மாறி இருக்கு. பெரியவரே வயசு ஆக ஆக தன்னடக்கம் வரணும். இது என்ன சிறு புள்ளை தனமா இருக்கு. தமக்கு தாமே போஸ்டர் அடிச்சு ஒட்டிகிறது. தமக்கு தாமே வெண்பா எழுதிகிறது. அமைதியா இருங்க.  
by k காளை,miami,United States    22-01-2010 23:51:35 IST
 இந்த காமெடி எல்லாம் தமிழ்நாடு ல மட்டும்தான் நடக்கும் இவரு இப்படி மக்களை கேனை பயலுகளா நினைச்சு இவரு பண்ற கேலிகூதெல்லாம் நாம இன்னும் எவ்ளோ காலத்துக்குதான் சகிசுகுறது,? ஓட்டுக்கு ஆயிரமும் ஒரு plate பிரியாணி கொடுத்தா தமிழக மக்கள் ஓட்டு போற்றுவோம்னு தலைவர் ரொம்ப தைரியத்துல இருக்காரு காலம் நிச்சயம் மாறும் அது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்துக்கும் கண்டிப்பாக தனது பாடத்தை தண்டனையாக கொடுக்கும் இன்ஷா அல்லா  
by B.H shajitha,madurai,India    22-01-2010 23:38:54 IST
 இங்கு தன்னையே பாராட்டி கொள்ளும் இந்த பெரிய மனிதனை பாருங்கள் கொஞ்சமது நீங்கள் அவரை தினமும் பாராட்டுங்கள் அப்போதுதான் தன்னை பாராட்டு குணம் போகும் பவம் அவரும் மனிதன் தானே புகழ்இச்சி அவருக்கு வேண்டுமல்லவா இப்படிக்கு உங்கள் அன்பர்த்த gopinath 
by R கோபிநாத்,JW,Singapore    22-01-2010 22:44:53 IST
 கடவுள் எல்லாம் அறிவர் . நாம் புத்தி சாலிகள் அல்ல நாம் சொல்ல்வது மற்றவர்களை ஏமாற்றுவது மற்றுமே மனிதர்கள் எளிச்சவனங்கள் இல்லே  
by L Raghavan,Bahrain,Bahrain    22-01-2010 22:17:01 IST
 என் மனம் பெரியது என்ற சொல்லினாலே உங்கள் மனம் சின்னது என்று உறுதிபடுத்தி விட்டீர்கள். ஏனென்றால் குறுகிய மனம் படைத்தவர்களால் மட்டுமே தன்னை தானே புகழ்ந்து கொள்ள முடியும். மக்கள் உங்களுக்கு vote போட்டு முதல் அமைச்சர் ஆக்கினதே அவங்கள் நலன் காப்பதற்கு தான். அது உங்களுக்கு தெரியும் போது (?!) நீங்களும் விழா எடுப்பை நிறுதிகொள்ளுவீர்கள் அவர்களும் உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி பாடுவதை நிறுத்துவார்கள்! அது வரை இந்த கேவலம் தொடர தான் செய்யும். ஒரு கேள்வி, நம்ம முன்னால் குனிஞ்சு கும்பிடு போடறவன் எல்லாம் முதுகுக்கு பின்னால் கேவலமா திட்டற ஆட்கள் தான் என்று என்னைக்காவது உங்கள் மூளைக்கு (?!) எட்டினது உண்டா? 
by S Mathew,Toronto,Canada    22-01-2010 21:20:17 IST
 When this regime will come to an end.self praising leader. Appraisal has to come from others not by self.It is unbecoming for a leader of this age. Don''''t you project anyone other than your family on government functions. Nobody is capable except your family? Even these DMK people watch all these things and still keep quiet. Shame.  
by king,Dubai,United Arab Emirates    22-01-2010 21:18:48 IST
 நல்லது நடந்தால் போற்றுவோம்... அதனால் மேலும் நல்லது நடக்கவேண்டும், ஆனால் திட்டம் எல்லாருக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும். பல திட்டங்கள் ஆரமிக்கும் போது இருக்கும் வேகம் & பொலிவு கடைசிவரை ஏனோ இருபது இல்லை. ஆட்சியாளர்கள் இதை உன்புடன் கவனிக்க வேண்டும். தினமலர் போன்ற மிடியா தொடருந்து குறைகளை சுட்டிகாட்டவேண்டும்.

வாழ்க இந்தியா!  
by அ.வே. செந்தில் குமார் ,ஜெட்டாஹ் - சவுதி அரேபியா ,India    22-01-2010 21:18:42 IST
 எங்கையா நம்ம கலிபோர்னியா நண்பர் இன்னும் கவிதை எழுதல...
இவரேதான் சட்டசபையில் தன்னை யாரும் புகழ வேண்டாம்னு சொன்னாராம், adhaiyum நம்ம பத்திரிகைகள் (தினமலர் utpada) வெட்கமில்லாமல் பிரசுரித்துள்ளனவாம்.

ஏழைகளுக்கும், ஊனமுற்றோருக்கும், விதவைகளுக்கும், முதியோருக்கும் செய்வதுதான் நாடாளுபவரின் தலையாய கடமை. ஒருக்கால் இவர் குடும்பமே கழகம், கழகமே குடும்பம் என்று முழங்கியதற்கு ஏற்றவாறு தனது மகன், மகள், பெறக் குழந்தைகள் இவர்களுக்கு செய்வதே முதலமைச்சரின் கடமை என்று முடிவு பண்ணி, மற்றவருக்கு செய்வது பாராட்டு வாங்க என்று வெட்கமே இல்லாமல் நினைத்துள்ளாரோ .. என்னவோ...  
by H நாராயணன்,Hyderabad,India    22-01-2010 21:09:04 IST
 என்ன கொடுமை சார் இது  
by R ஏமாற்ற பட்ட தமிழன் ,tt,Sri Lanka    22-01-2010 20:46:30 IST
 பாராட்டு விழா, பாராட்டு விழா ன்னு இதே பொலப்பா, கொஞ்சம் கூட கூச்சமா இருக்காதா, அஞ்சு தடவை முதல்வரா இருந்ததுக்கு இப்போ தான் ஊனமுற்றவருக்கு உதவி செய்யணும்னே எண்ணம் வருது இதுக்கு ஒரு பாராட்டு விழா, இன்னும் மக்கள் உங்களுக்கு காசு வாங்கி ஒட்டு போட்டுற்றுந்தங்கான தமிழ் நாட ஆண்டவன்னால கூட காப்பத்த முடியாது  
by k ஷ்யாமளா,chennai,India    22-01-2010 20:28:04 IST
 நீங்கள் என்னதான் பெரிய மனசு படைத்தவர் என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்து கொண்டோம்.(நீங்கள் ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் கொடுக்கும் பணத்தை வைத்தே)  
by t.g. kavara,valasiramani.tamilnadu.,India    22-01-2010 17:39:43 IST
 நீ எவ்வளவு பணம் தமிழ் நாட்டுக்காக செலவு செய்தாய்,,,எல்லாம் தமிழ் மக்களின் வரிப் பணமடா ,,டயலாக் மட்டும் வாய்கிழிய பேசுற ஒன்னாவது நிறைவேறியதா,,? இல்லை.. அப்புறம் எதற்கு இவ்வளவு சீன் இப்ப கஜானாவை காலிபண்ற நல்லதுக்கு இல்லை,,  
by t kallidas,russia,India    22-01-2010 17:18:12 IST
 கலைஞர் பாராட்டு வாரியத்திற்கு கலைங்கரே தலைவரா ? என்ன கொடு ம சரவணா இது ? 
by O saravanan,salem,India    22-01-2010 16:53:46 IST
 செம காமடி  
by krish das,madurai,India    22-01-2010 16:48:39 IST
 சூப்பர் நகைசுவை உணர்வு தனக்கு அதிகம் என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார்  
by O SARAVANAN,salem,India    22-01-2010 16:46:53 IST
 எல்லாரும் தி. மு.க வையும் அ.தி.மு.க வையும் திட்டினாலும் வோட்டு மட்டும் வெட்கமே இல்லாமல் போய் போடுகிறீர்கள். முதல்ல polling percentage 10% இருந்தால தான் இந்த கேடு கேட்ட அரசியல் வியாதிகளுக்கு படம் புகட்ட முடியும்  
by v செல்வா ,Chennai,India    22-01-2010 16:11:46 IST
 கலைனர் வீட்டு வசதி திட்டம் ,கலைனர் கண்ணொளி திட்டம் ,கலைனர் காப்பீட்டு திட்டம் /கலைஞ்சர் =தமிழ்நாடு
மக்களுடைய வரி பணத்தில் எத்தனை காலம் தான் தன் பெயருக்கு விளம்பரம் சேர்கின்றனர் வெட்ககேடு
கின்னஸ் ரிகார்ட் தான்.உதயகுமார் புகழ் டாக்டர்க்கு ஆசை எப்போது தான் தீரும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினை  
by k venkat,chennai,India    22-01-2010 16:01:57 IST
 என்றைக்கு இவரை மற்றவர்கள் பாராட்டவில்லையோ அன்று இவர் தன்னை தானே பாராட்டிக் கொள்வார்.  
by R Venkat,Bangalore,India    22-01-2010 15:30:58 IST
 எச்சை கையில் ஈ ஓட்டாதவர் சிலநாள்களுக்கு முன்னர் தான் தன்னை யார் ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் என்று ???? காலத்தில் சங்கர சங்கர என்பதுபோல் மனசாட்சி குத்தியதால் ஒத்துகொண்டார். சரி மனிதர் நிலைமை சரியாகிவிட்டது என்று நம்புவதற்குள் இப்படி மனசாட்சி இல்லாமல் ஏதோ உளறுகிறாரே.
 
by mr கோபி,Chennai,India    22-01-2010 14:39:12 IST
 நாக்கில் சுத்தம் இல்லாத பேச்சை வைத்து நீர் எப்படி தான் வாழ்கிறீரோ? தெரியவில்லை. 
by V இராமச்சந்திரன்,Dharmapuri,India    22-01-2010 13:54:09 IST
 நான் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தேன்.
தனக்கு ஒரு வழி மற்றவர்களுக்கு ஒரு வழியா? நீரும் இங்கேயா சிகிச்சை செய்து கொள்வதுதானே? உமிடம் பணம் பதவி இருப்பதால் நீங்கள் அயல் நாட்டுக்கு போவீர்கள் நாங்கள் எங்கே போவது? போதுமையா உம நலத்திட்டங்கள் எல்லாம் கண் துடைப்பு
சமாசாரங்கள் 
by nila mdu,madurai,India    22-01-2010 13:52:11 IST
 ஐயா தமிழக முதல்வரே, தாங்கள் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதர்க்காகத்தான் மக்கள் தங்களை முதல்வர் இருக்கையில் அமர்திள்ளனர் இது உங்கள் கடமை. தாங்கள் அரசின் பணத்தைதானே செலவிடுகிண்டிர்கள் சொந்த பணத்தை செலவிடுவதை போல பெருமை பித்தி கொள்கிண்டிர்களே இது நியாயம் தானா? 
by m சிவா,puducherry,India    22-01-2010 13:06:44 IST
 உன் மனது பெருசு எதில தெரியுமா உன் மகன் மகள் மட்டும் நalla இருக்கோணும் என்பதில் மட்டும் பெரிய manasu 
by GR கோவிந்தராஜன்s,CHENNAI,India    22-01-2010 12:45:05 IST
 I am also physically challenged and i am working in IT company.We dont want only free bus pass or any concessions.We want to live as normal man and don’t want to depend anybody.
We want to move every where without any struggle. Can physically challenged people visit bus stand , railway station or shopping , cinema theatre , any functions without help of others? IT companies only taking physically challenged people very carefully.I wish to say thanks for them. Government offices, other offices, shops, bus stand, Theaters ,tourist places and even hospitals are not have any special arrangements for physically challenged people visiting their places. And aged people also facing problem to step on big steps. I request CM provide permanent schemes and setup for their life . We are not beggers and dont want any sympathy from any body. we want also live as normal man.
 
by S Saravanan,Chennai,India    22-01-2010 11:50:43 IST
 aver manathay avaray paratik kolla vendiyathu than.ilavasam eantra payareil makkalai aamartri than kudumpaththinarai thalaimurai thalaimuraikum selva celipodu vala vakai saithu vaithuirrukum karunanithiyen manathu mekavum periyathu thaan 
by tamilselvi,madurai,India    22-01-2010 11:31:21 IST
 உலக பணக்கார குடும்பங்களில் இவர் குடும்பமும் ஒன்று .இவர் நினைத்தாள் எல்லா ஊனமுற்றவர்களும் அமெரிக்க சென்று பயனடைலாம் .அனால் இங்கே அவர் அனைவரையும் எம்மற்றிகொண்டு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு கின்னஸ் ரெகார்ட் செய்கிறார்  
by D Ilangovan,dubai,United Arab Emirates    22-01-2010 11:23:30 IST
 தன்னை தான் தாழ்த்துபவன் எவனோ அவனே உயர்த்தப்படுவான். (பைபிள்)

எண்பத்து ஐந்து வயதில் இந்த பாராட்டு தேவையில்லை. சாராயம் தமிழகத்தில் ஓடி எதனை குடும்பம் ஊனம் ஆனது என்று yosiyungal 
by gs ganapathy,khartoum,Sudan    22-01-2010 10:58:01 IST
 சி.எம் கடமை இல்லையா இது?இவிங்களையும் விட்டு வைக்கலையா? பாவம்........ அப்படி என்னதான் இர்கோ இந்த பாராட்டுல...???
''''''''ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது, '''''''' நமக்கு நாமே திட்டமா? அட ராம!!!! 
by V manickam,Singapore,India    22-01-2010 10:45:30 IST
 this is total waste dept in central/state only benefit to govt staff at this dept
people get iron box/3 wheel cycle only for advertisement. there is no usefull aid/employment /education and there is no monetering cell which funds has been utilize in usefull or not 
by mr பாலா,coimbatore,India    22-01-2010 09:30:03 IST
 நன்றி , நற்செயல்கள் செய்து பாவங்களை தீர்த்து கொள்ளுங்கள்  
by B பாலமுருகன்,Bangalore,India    22-01-2010 09:18:25 IST
 ஈழத்தமிழருக்கு நிறைய செய்து விட்டீர் இப்போது ஊனமுற்றோருக்கு செய்யப்போகிறீர் . 
by K பெரியசாமி ,peravurani,India    22-01-2010 09:08:22 IST
 இவர்களுக்கும் மனதில் இடம் தந்துள்ளார் பிடித்து கொள்ளுங்கள். சென்று விடுங்கள். அவர் குடும்பத்தில் யாரேனும் உணமுர்த்றோர் இருந்தால் அப்போலோ வில் இடம் ....
அல்லது மனதில் தான்
 
by t கலைஅரசன் ,Chennai,India    22-01-2010 08:53:30 IST
 ''''ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது.''''
எல்லா மதத்திற்கும் பொதுவான கடவுள் பெயரை தாங்கி இருக்கும் தங்களைத் தவிர வேறு யாருக்கு பெரிய மனது இருக்க முடியும்?
நன்றி.
நானும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். 
by K JEEVITHAN,villupuram,India    22-01-2010 08:12:21 IST
 ஊனமுற்றோருக்கு அரசு பல நல்ல திட்டங்களை அளித்து வருவது மகிழ்ச்சி.ஆனால் நீங்கள் கண்ணொளி திட்டம் பற்றி பேசினீர்கள்.அப்படி என்றல் என்ன? எப்போது அதை தொடங்கினீர்கள்?அதை உங்கள் கட்சி வளாகத்துக்குள்ளேயே வைத்துகொண்டால் எப்படி எங்களுக்கு தெரியும்?

என்னதான் இருந்தாலும் உங்களை நீங்களே புகழ்ந்து கொள்வது ரொம்ப ஓவர்.ஏன் பாராட்டு விழாவில் யாரும் சரியாக உங்களை பாராட்டவில்லையா? 
by S ஜெகத்,chennai,India    22-01-2010 07:13:47 IST
 he is the first person to recieve wheel chair at govt expense ,so he wants others atleast to receive small benefits,there by he can adjust the expentiture of wheelchair with others,wonderful idea. 
by mv bala,ch-33,India    22-01-2010 06:46:48 IST
 அது என்னைய உங்க கண் சிகிச்சைக்கு மட்டும் அமெரிக்க போறீங்க, எங்களுக்கு மட்டும் முகாமா..
ஏன் உங்களுக்கு இங்க இருக்ற மர்துவதுல நம்பிக்கை இல்லையா.. இங்க தமிழ்நாடே உங்களால ஊனம்
ஆயிருக்கு நீங்க வேற எதோ பெரிய மனம் நு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. இன்னும் கொஞ்ச நாள் தன போங்க... 
by g சாட்,Chennai,India    22-01-2010 03:19:20 IST
 ஊனமுற்றோருக்கு கருணா அரசு, ஜெயாவை விட நல்லது செய்தது என்பதை மறுக்க முடியாது. மேலும் கருணா, கண் பாதிக்கபட்டோருக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார் என்பதையும் ஏற்று கொள்கிறேன். ஆனால் தனக்கு தானே புகழ்ந்து கொள்ள கூடாது.  
by ரவி,TORONTO,Canada    22-01-2010 03:18:38 IST
 What MK says-In poor people laugh,he sees God.To see God only,MK is keeping all poor. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire)    22-01-2010 03:00:19 IST
 கலைஞர் அவர்களே.ஊனமுற்றவர்களும் உங்களுக்கு பாராட்டு விழா நடத்திவிட்டனர்.இவர்களுக்கு நீங்கள் பல வசதிகளையும்,பல சலுகைகளும் உதவிகளையும் இன்னும் மக்கள் வரி பணத்தில் வாரி வழங்கிட வேணும்.
ஊனமுற்றவர்கள் வாழ்க்கை தரம் இன்னும் உயர்தபடனும்.இப்படி பட்ட செயல்களுக்கு பணம் செலவிடுவது நன்று.நன்றி உங்களுக்கு.

உங்கள் சொந்த பணத்தில் ஊனமுற்றவர்கள் நலனுக்கு பல திட்டங்கள் செயல் படுத்தனும் என நினைத்தால் உங்களின் பெரிய மனதை காட்டும். இப்போ நீங்கள் தமிழக முதல்வர் இவர்களுக்கு நீங்கள் செய்வது உங்கள் கடமை.இவர்களுக்காக மட்டும் இல்லை எந்த தமிழ்நாடு தமிழனுக்கும் நல்லது செய்ய தான் நீங்கள்.

ஒரு கேள்வி; அதிமுகவும்,,திமுகவும்..அரசுகளில் இருக்கும் போது எந்த மக்கள் நல திட்டங்கள் செய்தாலும் மக்கள்வரி பணத்தில் தானே செய்கிறிர்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் முதல்வர்.அப்படி இருக்கும் போது தன் படத்தை எதுக்கு போடனும்? தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் போடலாமே.
பள்ளி போகும் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும்.பஸ் பாசிலும் முதல்வர் படம். எங்கே திரும்பினாலும் முதல்வர் படங்கள் தான் இந்த இரு ஆட்சிகளில்.
 
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    22-01-2010 02:36:22 IST
 ''''ரோஜா பூவின் காம்பை கிள்ளி விட்டால் அதற்கு மனம் இல்லாமல் போய் விடுமா? அதே போல் தான் கால் இல்லாதவர்கள் வாழ்க்கையிலும் மனம் இல்லாமல் போய் விடாது''''. முத்தமிழ் வித்தகரே என்ன கொடுமையான் உதாரணம் ஐயா. கவியரசு (வைரமுத்து அல்ல) பாகபிரிவினை படத்தில் எழுதிய ''''தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவது உண்டோ'''' என்ற பொன்னான வரிகளை மேற்கோளிட்டு பேச கூடாதா? 
by MKM மன்னார்சாமி,Chennai.,India    22-01-2010 00:38:44 IST
 அட பாவமே! கடந்த பல நட்ட்களா பாராட்டு விழா ஒன்னும் இல்ல போலும், கருணாநிதி தன்னை தானே பாராட்டிகொல்கிறார்!

நீர் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம், தமிழக ஏழை மக்கள் எங்கு செல்வார்? பணக்காரர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசின் கண்ணொளி திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கூறுகிறிர்கள், உங்களுடைய குடும்பம் பணக்கார குடும்பம் இல்லையா? அவர்கள் அரசின் கண்ணொளி திட்டத்திற்கு கொடுத்த தொகை எவ்வளவு? இலவச திட்டங்களை நிறுத்தி அப்பணத்தை அரசின் கண்ணொளி திட்டத்திற்கு பயன்படுத்த கூடாதா? 
by M அறிவுமதி ,Chennai.,India    22-01-2010 00:27:37 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்