சென்னை : ''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் கேள்வித்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அப்பாடத்தில் அவர்கள் தோல்வி அடையாத வகையில், தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உறுதி அளித்துள்ளார். குளறுபடி நடந்த இடங்களில் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆசிரியர்களை, இனி தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்றும், அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு போர்டு மாணவர்களும் கலந்து ஒரு அறையில் தேர்வெழுத வைக்கப்பட்டனர். முதல் நாள், தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில், ஒரு அறையில் மெட்ரிக் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., கேள்வித்தாளும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மெட்ரிக் கேள்வித்தாளும் மாற்றி வழங்கப்பட்டன. இதேபோல், தென் மாவட்டங்களில் ஒரு சில மையங்களிலும் கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அழுது புலம்பினர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, உரிய மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பிரச்னைக்குரிய தேர்வு அறைகளில், மெட்ரிக் மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் கேள்வித்தாள்கள் மாற்றி வழங்கப் பட்டுள்ளன. விசாரணை நடத்தியதில், 29 மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 29 விடைத் தாள்களும், இன்று (நேற்று) தேர்வுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு ஆசிரியர்களைக் கொண்டு, இந்த 29 விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பிரச்னையில், 29 மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதபடி, விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்படும். இன்று நடந்த (நேற்று) தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், இந்த மாணவர்கள் பெறும் மதிப்பெண்களும், பள்ளிகளில் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, தமிழ் முதல் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். சம்பந்தபட்ட 29 மாணவர்களும், தமிழ் முதல் தாள் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள். அவர்களுக்கு சிறிய பாதிப்புகூட ஏற்படாது. இந்தப் பிரச்னையில், மாணவர்களும், பெற்றோரும் கவலைப்பட வேண்டாம்.
நடவடிக்கை என்ன? கேள்வித்தாள் மாற்றப்பட்ட அறைகளில் தேர்வுப் பணி பார்த்தவர்கள் மற்றும் மையத்தின் முதன்மை கண்காணிப் பாளர், தேர்வுப் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தேர்வு அலுவலர் ஆகியோரை, இனி வரும் காலங்களில் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பிரச்னை நடந்த மூன்று பள்ளிகளுமே தனியார் பள்ளிகள். எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் நேற்றே தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். துறை அலுவலர்களாக செயல் பட்ட, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தபட்ட பாடத்தில் தோல்வி அடையாமல், தேர்ச்சிக்குரிய மதிப் பெண்கள் அளிக்கப்படும் என்பதை தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கேள்வித்தாளை சரியான முறையில் வழங்கியிருந்தால், நன்றாக தேர்வெழுதி அதிகபட்ச மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க முடியும். எனவே, 29 மாணவர்களுக்கும் அதிகபட்ச மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தமிழ் பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை என்பதால், மதிப்பெண்களை அதிகமாக வழங்குவதால் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர்.
தண்டனையா... பரிசா...? கேள்வித்தாளை மாற்றி வழங்கிய விவகாரத்தில், 'சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அலுவலர்களை, இனிமேல் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்த மாட்டோம்' என, தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை, சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏகமனதாக வரவேற்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தேர்வுப் பணிகளை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், 'ஆளை விட்டால் போதும்' என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். புதிதாக வேலையில் சேர்ந்த ஆசிரியர்கள் தான், உற்சாகத்தில் எந்தப் பணி கொடுத்தாலும் செய்கின்றனர். எனவே, ஏதாவது சிறிய பிரச்னை என்றாலும், 'இனிமேல் தேர்வுப் பணி கிடையாது' என, தேர்வுத்துறை முடிவெடுத்தால், ஆசிரியர்களை பொறுத்தவரை, அதை தண்டனையாக கருதாமல், 'பரிசாக'த்தான் கருதுவர்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by K தேவா,Muscat,Oman 26-03-2010 00:32:34 IST |
![]() ![]() |
by Yoganath,Mumbai,India 26-03-2010 00:31:33 IST |
![]() ![]() |
by K தேவா,Muscat,Oman 26-03-2010 00:22:42 IST |
![]() ![]() |
by N Nirmala,NJ,UnitedStates 26-03-2010 00:10:05 IST |
![]() ![]() |
by Mohammed Ali,Trichy,India 25-03-2010 23:39:58 IST |
![]() ![]() |
by s sankar,coimbatore,India 25-03-2010 23:16:51 IST |
![]() ![]() |
by P சாமிநாதன்,Pudukkottai(Dist),India 25-03-2010 21:08:28 IST |
![]() ![]() |
by A eswaran,TIRUPPUR,India 25-03-2010 21:04:12 IST |
![]() ![]() |
by S.S ஜகுபர் சாதிக்,jeddah,SaudiArabia 25-03-2010 20:37:50 IST |
![]() ![]() |
by d தேவன்,india,India 25-03-2010 19:53:15 IST |
![]() ![]() |
by c venkatesh,chennai,India 25-03-2010 19:40:30 IST |
![]() ![]() |
by GN.BABAJI,chennai,India 25-03-2010 19:29:45 IST |
![]() ![]() |
by A B Raj,Bangalore,India 25-03-2010 19:24:13 IST |
![]() ![]() |
by Mrs. Raninewton,Kuwait,Kuwait 25-03-2010 19:12:53 IST |
![]() ![]() |
by m கார்த்திக், பந்திங் சிலாங்கூர்,Banting,Selangor,Malaysia 25-03-2010 19:07:17 IST |
![]() ![]() |
by G RIYA,delhi,India 25-03-2010 18:37:19 IST |
![]() ![]() |
by V நிரூபன் ,chennao,India 25-03-2010 17:43:44 IST |
![]() ![]() |
by s வேல்ஸ்,tamilnadu,India 25-03-2010 17:41:04 IST |
![]() ![]() |
by M THIRUMURTHY,tirupur,India 25-03-2010 17:39:59 IST |
![]() ![]() |
by A alagiriswami,chennai,India 25-03-2010 17:28:23 IST |
![]() ![]() |
by K Kalaivani,hubli,India 25-03-2010 17:21:13 IST |
![]() ![]() |
by P Parthiban,Muscat,Oman 25-03-2010 16:49:49 IST |
![]() ![]() |
by S stalin,chennai,India 25-03-2010 16:40:45 IST |
![]() ![]() |
by ARUNA ARUNACHALAM,BOMBAY,India 25-03-2010 16:15:24 IST |
![]() ![]() |
by n periyasamy,fintas,Kuwait 25-03-2010 16:12:59 IST |
![]() ![]() |
by D Devakumar,Kadatchapuram,India 25-03-2010 15:49:16 IST |
![]() ![]() |
by G Vaithiyanathan,Alain,,UnitedArabEmirates 25-03-2010 15:26:49 IST |
![]() ![]() |
by d ரமேஷ்,chennai,India 25-03-2010 15:15:13 IST |
![]() ![]() |
by mr கோபி,chennai,India 25-03-2010 15:01:37 IST |
![]() ![]() |
by K deen,singapore,Singapore 25-03-2010 15:01:02 IST |
![]() ![]() |
by Ms. ஜூலி,Thirunelveli,India 25-03-2010 14:41:14 IST |
![]() ![]() |
by P Kumaran,Avadi,India 25-03-2010 14:34:34 IST |
![]() ![]() |
by Deepan,Gujarat,India 25-03-2010 14:26:23 IST |
![]() ![]() |
by G Venkataramani,Madurai,India 25-03-2010 14:11:01 IST |
![]() ![]() |
by C Saravanapriyan,Tamilnadu,India 25-03-2010 14:07:02 IST |
![]() ![]() |
by N saravanan,coimbatore,India 25-03-2010 13:49:39 IST |
![]() ![]() |
by M SRINIVASAN,vellore,India 25-03-2010 13:41:08 IST |
![]() ![]() |
by K குமார்,Bangalore,India 25-03-2010 13:30:04 IST |
![]() ![]() |
by T Vijayan,Ramanathapuram,India 25-03-2010 13:24:16 IST |
![]() ![]() |
by pv chakrapani,madurai,India 25-03-2010 13:21:45 IST |
![]() ![]() |
by r விஜய்,ramanadapuram,India 25-03-2010 13:16:13 IST |
![]() ![]() |
by s sham,uae,UnitedArabEmirates 25-03-2010 12:44:03 IST |
![]() ![]() |
by v christopher,sanaa,Yemen 25-03-2010 12:30:37 IST |
![]() ![]() |
by V Vaithianathan,chennai,India 25-03-2010 12:30:14 IST |
![]() ![]() |
by m muralish,cheennai,India 25-03-2010 12:19:35 IST |
![]() ![]() |
by M உமாபதி,tirupur,India 25-03-2010 11:54:27 IST |
![]() ![]() |
by BE எழில்,Abudhabi,India 25-03-2010 11:11:12 IST |
![]() ![]() |
by K. காசி விஸ்வநாதன் ,dammam.saudi,India 25-03-2010 11:09:00 IST |
![]() ![]() |
by s மணிவண்ணன்,dubai,UnitedArabEmirates 25-03-2010 11:02:21 IST |
![]() ![]() |
by K Muhyideen,Dubai,India 25-03-2010 10:54:15 IST |
![]() ![]() |
by Mr Kershoem,Pandhalgudi,India 25-03-2010 10:44:11 IST |
![]() ![]() |
by SD செந்தில் குமார்,Chennai,India 25-03-2010 10:40:48 IST |
![]() ![]() |
by m gurumoorthy,coimbatore,India 25-03-2010 10:29:34 IST |
![]() ![]() |
by A Asok,Chennai,India 25-03-2010 10:24:09 IST |
![]() ![]() |
by s Nagarajan,madurai,India 25-03-2010 10:24:03 IST |
![]() ![]() |
by v uma,Coimbatore,India 25-03-2010 10:07:59 IST |
![]() ![]() |
by A SHANKAR,MALE,Maldives 25-03-2010 09:43:01 IST |
![]() ![]() |
by s swaminathan,chennai,India 25-03-2010 09:42:06 IST |
![]() ![]() |
by பாலாஜி.S,kanchipuram,India 25-03-2010 09:35:41 IST |
![]() ![]() |
by M கோபால்,chennai,India 25-03-2010 09:32:21 IST |
![]() ![]() |
by g அழகுநம்பி,qatar,India 25-03-2010 09:15:16 IST |
![]() ![]() |
by R Diwansha,dubai,UnitedArabEmirates 25-03-2010 09:14:24 IST |
![]() ![]() |
by kilavansethu,c,India 25-03-2010 09:01:58 IST |
![]() ![]() |
by M ரேணுகா தேவி,coimbatore,India 25-03-2010 08:56:58 IST |
![]() ![]() |
by MANNANDHAI,India,India 25-03-2010 08:48:38 IST |
![]() ![]() |
by r razin,malaysia,India 25-03-2010 08:31:36 IST |
![]() ![]() |
by K.V Kumar,Doha,Qatar 25-03-2010 08:21:20 IST |
![]() ![]() |
by P தனகோபால்,Singapore,India 25-03-2010 08:10:37 IST |
![]() ![]() |
by J Nishamohan,AngMoKio,Singapore 25-03-2010 08:07:12 IST |
![]() ![]() |
by S சத்திய Seelan,Salem,India 25-03-2010 07:52:07 IST |
![]() ![]() |
by V. Sundar,chidambaram,India 25-03-2010 07:45:41 IST |
![]() ![]() |
by P Elangovan,villupuram,India 25-03-2010 07:38:48 IST |
![]() ![]() |
by H SYLVESTERRAJ,trichy,India 25-03-2010 07:19:33 IST |
![]() ![]() |
by V.. Sundar ,Chidambaram,India 25-03-2010 06:45:53 IST |
![]() ![]() |
by ani,Trichy,India 25-03-2010 06:37:25 IST |
![]() ![]() |
by Dr.R. ரவீந்திரநாத் நேரு Ph.D.,VilathikulamPUDUR,India 25-03-2010 06:27:22 IST |
![]() ![]() |
by Ajith அஜித்,Singapore,Singapore 25-03-2010 04:35:48 IST |
![]() ![]() |
by b கிருஷ்ண மூர்த்தி,england,India 25-03-2010 04:16:27 IST |
![]() ![]() |
by n easwaran,subangjaya,Malaysia 25-03-2010 03:48:11 IST |
![]() ![]() |
by S KADHIRESAN,SANKARI,India 25-03-2010 03:38:20 IST |
![]() ![]() |
by S KADHIRESAN,SANKARI,India 25-03-2010 03:22:34 IST |
![]() ![]() |
by B Jagannathan,NewYork,UnitedStates 25-03-2010 02:48:49 IST |
![]() ![]() |
by Sathish,Chennai,India 25-03-2010 02:37:47 IST |
![]() ![]() |
by k senthil kumar,sharjah,UnitedArabEmirates 25-03-2010 01:45:09 IST |
![]() ![]() |
by P பால்ராஜ்,Guadalajara,Mexico,Mexico 25-03-2010 01:34:22 IST |
![]() ![]() |
by k கைப்புள்ள,nj,India 25-03-2010 01:23:13 IST |
![]() ![]() |
by s இம்சைஅரசன்,madurai,India 25-03-2010 00:32:09 IST |