இவ்வாறு கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டால் அதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது உரிமையாளர் தான். சேமிப்பு, வங்கிக்கடன் என திரட்டிய பணத்தை முதலீடு செய்த நிலையில், கட்டுமான பணிகள் பாதியில் முடங்கினால், உரிமையாளர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாவார்.
இந்த சூழலில் உரிமையாளர், கட்டுமான நிறுவனம் இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க கட்டுமான ஒப்பந்தம் தயாரிக்கும் நிலையிலேயே விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தில் இடத்தின் அளவு, வீடு கட்டி முடிக்கப்படும் காலம், வீட்டுக்கான மதிப்பு, வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை எப்படி அமைக்கப்படும் உள்படப் பல்வேறு விஷயங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறும்.
பொதுவாக கட்டுமான ஒப்பந்தம் போடும் நிலையில் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து பலரும் கவலைப்படுவதில்லை. தாமதம் காரணமாக பணிகள் முடங்கும் போது தான் ஒப்பந்த நிலையில் தவறு செய்துவிட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்.
கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்திடும் முன், அதில் கட்டுமான பணிக்கான கால அட்டவணையை குறிப்பிட வேண்டும். பணிகள் தாமதமானால், இதற்கான நிவாரணம் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பொதுவாக, சதுர அடிக்கு ஐந்து அல்லது, 10 ரூபாய் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாதத்துக்குமான இழப்பீடு கணக்கிடப்படும். இதில் ஒப்பந்தத்தில் சதுர அடிக்கு, 10 ரூபாய் என்று குறிப்பிடப்படும் நிலையில், கட்டுமான நிறுவனம், சதுர அடிக்கு, 5 ரூபாய் தான் இழப்பீடாக வழங்க முடியும் என்று கூறலாம்.
இது போன்ற நிகழ்வுகள் உரிமையாளரின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துவிடும். இத்தகைய நிகழ்வுகளில் உரிமையாளர்கள் பிரச்னைக்கு நிற்காமல் அது குறித்து ரியல் எஸ்டேட் ஆணையம், நீதிமன்றத்தை அணுகு வேண்டும்.
பல இடங்களில் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து கொடுக்கிறோம் என்று கூறி, சதுர அடிக்கு, 20 ரூபாய் தர எளிதில் ஒப்புக்கொள்கின்றனர். ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் நடக்கும்போது அவர் வேறு நிலைப்பாட்டை எடுப்பார்.
பிரச்னை ஆனால், என்னால் இவ்வளவு தான் தர முடியும் என்று வம்புக்கு நிற்பார்கள். அப்போது வேறு வழியின்றி அவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை பெறும் நிலைக்கு உரிமையாளர் தள்ளப்படுகிறார் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.
கவனத்திற்கு
அனைத்து கட்டுமான ஒப்பந்தங்களும் நிறைவு தேதியைக் கொண்டுள்ளன மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்றால், ஒப்பந்தம் நியாயமான நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும். கட்டுமான ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட கால நீட்டிப்பு, பொதுவாக 'நேரம் ஒப்பந்தத்தின் சாராம்சம் அல்ல' என்று கருதப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாமதத்தின் காரணமாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினரால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டாலும், தாமதத்திற்கான இழப்பீடுகளை இழப்பீடு கோர முடியாது
வாசகர் கருத்து (2)