Advertisement
அ.தி.மு.க தீர்மானங்கள் செல்லும்: பன்னீர்செல்வம் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி பொ.செ., ஆனார் பழனிசாமி
Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (73)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
12:19 PM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

11:17 AM IST
தொண்டர்களால் தேர்வானேன்; பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க., பொது செயலாளராக பொறுப்பேற்ற பழனிசாமி அளித்த பேட்டியில்; தொண்டர்களால் நான் பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். தொண்டர்களுக்கும், நிர்வாகிககளுக்கும் நன்றி. என்றார்.

11:00 AM IST
பொதுசெயலாளராக பழனிசாமி அறிவிப்பு

வழக்கில் தீர்ப்பு வெளியானதும், பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகம் வந்தார். அங்கு அவரை அதிமுக பொதுசெயலாளராக பழனிசாமியை நிர்வாகிகள் அறிவித்தனர்.

10:51 AM IST
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அப்பீல்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அப்பீல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர். மகாதேவன், சபீக் ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்முன்பு அதிமுக வழக்கு நாளை (மார்ச்29 ) விசாரணை நடக்கிறது.

முழு விபரம்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பழனிசாமி அதிமுக.,வின் பொதுச்செயலாளராக இன்றே அறிவிக்கப்பட்டார்.

ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் கோர்ட் மறுத்து விட்டது.


இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இந்த வழக்கு நாளை (மார்ச் 29) 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.


அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.






மார்ச் 22ம் தேதி இம்மனுக்களின் விசாரணை நீதிபதி குமரேஷ் பாபு முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இவ்வழக்கில் இன்று ( மார்ச் 28 ) காலை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


வழக்கு தீர்ப்பு வெளியானதும், பழனிசாமி அதிமுக அலுவலகம் வந்தார். அங்கு அவரை கட்சியின் பொதுச்செயலாளராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff

வாசகர் கருத்து (73)

Ellamman - Chennai,இந்தியா
28-மார்-202322:47:11 IST Report Abuse
Ellamman இப்போ கட்சியாய் கைப்பற்ற ஒரு புத்தம்புதிய செய்முறை விளக்கத்தை நவீன நாகராஜா சோழன் எம் ஏ ( ஹி ஹி ) சொல்லி கொடுத்திருக்கிறார். நமக்கு முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்ற அந்த பழமொழி மிக மிக ஆணித்தரமாக நடைமுறையில் நடந்துகொண்டிருப்பது தெரியும் அடுத்த நவீன நாகராஜா சோழன் வேலு பாயி யா இல்லை தங்கமணியா? இல்லை தண்ணிவண்டி ஷண்முகமா? யாரிடம் அதிகமாக குவிந்து இருக்கு?? இந்த உறுபடிகளில் யாரை மேலே இருப்பவன் தயார் செய்வான்???
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
28-மார்-202322:42:34 IST Report Abuse
Ellamman மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி. சத்யராஜ்...அட அட.. அவரும் கொங்கு நாட்டு சிங்கங்கோய் நவீன நாக ராஜ சோழன் பராக் பராக் பராக். மூணாவது பராக் சொல்லி முடிக்கும் முன்பே.. இன்னொரு அதி நவீன நாகராஜா சோழன் அந்த கட்சியிலே முளைப்பார் என்பதை ஆழுத்தமாகவும்.. ஆணித்தரமாகவும் அடித்து சொல்கிறேன்
Rate this:
Cancel
Vinay - Toronto,கனடா
28-மார்-202322:42:01 IST Report Abuse
Vinay சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த வழக்கு , மணிங்க மேல ஊழல் வழக்கு எல்லாம் வருஷ கணக்குல இழுத்துக்கிட்டு போகுது ...ஆனா இந்த மாதிரி கேஸுக்கு மட்டும் தீர்ப்பு உடனே வருதே, நாடு நல்லா விளங்கிடும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X