sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

சின்ன மச்சான் செவத்த மச்சான்!

/

சின்ன மச்சான் செவத்த மச்சான்!

சின்ன மச்சான் செவத்த மச்சான்!

சின்ன மச்சான் செவத்த மச்சான்!


PUBLISHED ON : ஜன 15, 2019

Google News

PUBLISHED ON : ஜன 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கத்திய இசையின் தாக்கம் திரை உலகை ஆட்டிப் படைத்தாலும் நாட்டுப்புற கலைகளும், கலைஞர்களும் எப்போதுமே கொண்டாடப்படுவார்கள் என்பதை பதிவு செய்து, அனைவராலும் கவனிக்கப்பட்ட நாட்டுப்புற பாடகர், நடிகர் என பல முகங்களை கொண்ட செந்தில் கணேஷ் மனம் திறந்த நிமிடங்கள்...

* உங்களின் கலை பயணம் ஆரம்பித்தது...

புதுக்கோட்டை மாவட்டம் கலபம் கிராமம் எனது பூர்வீகம். கிராம பின்னணி கொண்டதால் பெரும்பாலும் எந்தவொரு விசேஷம் என்றாலும் நாட்டுப்புற பாடல்கள் தான் கேசட்டுகளில் போடுவார்கள். எங்கள் பகுதியில் பிரபலமான கோட்டை சாமி, ஆறுமுகம் போன்ற மூத்த நாட்டுப்புற கலைஞர்களின் பாடல்கள் தான் ஒலிக்கும்.

இதைக் கேட்டு வளர்ந்ததால் என்னவோ எங்களுக்கு பாடல் என்றால் இதுதான். அதுமட்டுமின்றி கிராமத்தில் பேய் ஓட்டுவது, தாலாட்டு பாடுவது போன்ற ராகங்கள், பாடல்களை உள்வாங்கி கொள்வேன். இப்படித்தான் என்னுடைய கலை பயணம் எனது எட்டாவது வயதிலே ஆரம்பித்துவிட்டது.

* கச்சேரிகளில் பாடுவதற்கும், திரையிசையில் பாடுவதற்கும் உள்ள வித்தியாசம்...

கச்சேரிகளில் பாடும் போது அந்த மேடையில் நாம் தான் ராஜா. இஷ்டத்துக்கு ஜாலியா என்ஜாய் பண்ணி பாடலாம். திரையிசையில் பாடுவது ரொம்ப சிரமம்; அதில் எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கொண்டுவரணும். பாட்டு அப்போதான் கொடுத்திருப்பார்கள். வரிகளில் தவறு இல்லாமல் சரியா உச்சரிக்கணும். வீரமாக பாட சொன்னாலும் பாடணும், இதமாக காதல் ரசம் சொட்ட சொட்ட பாட சொன்னாலும் பாடணும்.

* நீங்கள் பாடும் பாடலை நீங்களே உருவாக்குகிறீர்களா, யாராவது எழுதி தருகிறார்களா...

எனக்கு பாடல்கள் உருவாக்கி கொடுக்கிறது குருநாதர் செல்லதங்கையா. மற்ற கலைஞர்களின் பாடல்களையும் பாடியிருக்கிறேன்.

* நாட்டுப்புற பாடகர்களில் உங்களை கவர்ந்தவர்...

அந்தோணிதாசன். முதன் முதலில் கவர்ந்தவர் கோட்டைச்சாமி. அவர் இப்போது இல்லை.

* அம்ரீஷ் இசையில் பாடிய 'சின்ன மச்சான், செவத்த மச்சான்' பாடலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என நினைத்தீர்களா...

செல்ல தங்கையா எழுதிய பாடல் இது. பிரபுதேவா தான் வித்தியாசமாக இருக்கிறது என இந்த பாடலை தேர்வு செய்தார். இந்த அளவுக்கு பிரபலமாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

* கரிமுகன் படத்தில் நடித்ததை பற்றி...

கதாநாயகனாக நடித்ததற்கு காரணம் எனது குருநாதர் தான். அவருக்கு ரொம்ப காலமாக ஒரு படத்தை டைரக்ட் பண்ணனும் என்று ஆசை. ரொம்ப காலமாக நம் கூடவே இருக்கிறானே என்று அந்த கதைக்கு என்னை தேர்வு செய்தார்.

* சமீபத்தில் பாடிய பாடல்கள்..

சார்லி சாப்ளின், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறேன்.

* நாட்டுப்புற பாடல்களுக்கு திரையிசையில் வெற்றிடம் இருப்பதாக ரசிகர்கள் உணர்கிறார்கள். அதைப் பற்றி..

வெற்றிடம் இருக்கத்தான் செய்கிறது. இளையராஜா காலத்தில், இசைப் பாடல்களை கொடுத்தார். பின்னர் ஏ.ஆர்.,ரகுமான் வந்த போது டிரெண்ட் மாறியது. அவசியம் வரும் பொழுது தான் நாட்டுப்புற பாடல்களை கதையில் வைக்க முடியும்.

* நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல என்ன செய்யப்போகிறீர்கள்..

சிறுவர்களுக்கு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் என்றால் என்ன என்பது தெரியாது. விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இவரை பாராட்ட mannukketharagam@gmail.com.

பாடகர் செந்தில் கணேஷ்






      Dinamalar
      Follow us