
* சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சப்பாத்தி சூடாக இருக்கும்
* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் கழுவினால், பாத்திரம் பளபளப்பாக இருக்கும்
* மாவில் சிறிது நல்லெண்ணெய் கலந்தால், இட்லி மிருதுவாக இருக்கும்
* அரிசி, காய்கறி கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால் செழிப்பாக வளரும்
* தோசைக்கல்லில் மாவு ஒட்டினால் கொஞ்சம் புளியை, வெள்ளைத்துணியில் கட்டி, எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்து சுட்டால் நன்றாக வரும் தோசை
* வாழைப்பூ, வாழைத்தண்டை நறுக்கி, மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாது; கறையும் பிடிக்காது; துவர்ப்பும் நீங்கி விடும்
* மாவில் சிறிது சர்க்கரை போட்டால் தோசை மொறுமொறுப்பாக வரும்
* வறுத்த வெந்தய பொடியைப் போட்டால் சாம்பார் சுவை, வாசனையுடன் இருக்கும்
* உப்பு கலந்த நீரில், 10 நிமிடம் ஊற வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும் கிழங்கு
* சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் பிசையும் போது, சப்பாத்தி மாவு கையில் ஒட்டாது
* காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருக்க சிறிது உப்பு, வினிகரைத் தொட்டு பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பளிச் என்று இருக்கும்.
- பாலாஜி

