sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

கண்கட்டு கல்வி!

/

கண்கட்டு கல்வி!

கண்கட்டு கல்வி!

கண்கட்டு கல்வி!


PUBLISHED ON : ஜூன் 05, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 7ம் வகுப்பில் படித்தேன். உடன் படித்த ஏனோக் ஹரிதாஸ் பார்வைக் குறைபாடு உடையவன். தட்டு தடுமாறி வகுப்புக்கு வந்து செல்வான்.

மதிய உணவு இடைவேளையில், அவன் மீது, மாட்டுச்சாணம் எறிவது, கல்லால் அடித்து துன்புறுத்துவது போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபட்டனர் மாணவர்களில் சிலர். இது பற்றிய புகார், ஆசிரியர் சாமுவேல் பொன்ராஜிடம் சென்றது. சம்மந்தப்பட்ட மாணவர்களை மைதானத்துக்கு அழைத்து, துணியால் கண்களை கட்டி, சுற்றி வர சொன்னார்.

செய்வதறியாது திகைத்தவர்களிடம், 'ஒரு நிமிடம் கூட பார்வை இல்லாமல் நடக்க முடியவில்லையே... பார்வையில்லாமல் பல கி.மீ., துாரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்பவனை துன்புறுத்துவது நியாயமா...' என கேட்டார். பதில் சொல்ல முடியாமல் நின்றனர்.

பின், 'இனிமேல் இப்படி செய்ய கூடாது...' என அறிவுறுத்தி, கண் கட்டை அவிழ்த்து விட்டார். அனைவரும் அந்த மாணவனிடம் மன்னிப்புக் கேட்டனர்; அன்றிலிருந்து குறும்புத்தனம் செய்வதை விட்டு அன்புடன் பழகினர்.

தற்போது என் வயது, 37; இச்சம்பவம் நடந்து, 25 ஆண்டுகள் ஆகி விட்டன; மாணவர்களின் குறும்புத்தனத்தை, எளிய வழிமுறையால் திருத்திய ஆசிரியரை இன்றும் மறக்க முடியவில்லை.

- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.






      Dinamalar
      Follow us