sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நம்மூரிலும் மிளகு பயிரிடலாம்

/

நம்மூரிலும் மிளகு பயிரிடலாம்

நம்மூரிலும் மிளகு பயிரிடலாம்

நம்மூரிலும் மிளகு பயிரிடலாம்


PUBLISHED ON : அக் 30, 2019

Google News

PUBLISHED ON : அக் 30, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிளகு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகும் மிளகு செடிகளை நம்மூரில், சாகுபடி செய்துள்ளேன்.தென்னை, பாக்கு ஆகிய உயரமான மரங்களில் ஊடுபயிராக மிளகு பயிரிடலாம். ஒரு செடிக்கு, 10 கிலோ மிளகு பழங்கள் வரையில், மகசூல் கிடைக்கும்.அதை உலர்த்திய பிறகு, 3 கிலோ மிளகு கிடைக்கும் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். அதை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை.எனக்கு சொந்தமான மாந்தோட்டத்தில், மிளகு செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன். மிளகு கொடி நன்றாக வளர்ந்து, மாஞ்செடிகள் மீது படர்ந்துள்ளன.ஒரு ஆண்டில், மிளகு அறுவடைக்கு வரும் என, எதிர்பார்க்கிறேன். முழுமையான மகசூல் கிடைத்த பின்தான்; வருவாய் குறித்து தெரிய வரும். இருப்பினும், நம்மூர் மண்ணுக்கு, மிளகு சாகுபடி ஏற்புடையதாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000.






      Dinamalar
      Follow us