பந்தல் காய்கறி சாகுபடி பயிற்சி
தர்பூசணி மற்றும் பந்தல் காய்கறி குறித்து, இரண்டு நாள் தின பயிற்சி நடைபெற உள்ளது.செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், தர்பூசணி மற்றும் பந்தல் காய்கறி குறித்து, நவ-ம்பர் 4,- 5 ஆகிய இரு தேதிகளில், இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளன.இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044- 2745 2371.
ஆடு வளர்ப்பு பயிற்சி
ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி, நாளை அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைபேசி எண்: 044- 272 64019.

