sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மானாவாரி பருத்தி விதைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்

/

மானாவாரி பருத்தி விதைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்

மானாவாரி பருத்தி விதைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்

மானாவாரி பருத்தி விதைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்


PUBLISHED ON : மார் 14, 2012

Google News

PUBLISHED ON : மார் 14, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருத்தியில் வேரழுகல் நோய், வாடல் நோய், இலைக்கருகல் நோய் என பல்வேறு நோய்கள் விதை மூலம் தாக்குகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக் கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துக்களும் முளைத்து நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன. விதைமூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதைநேர்த்திசெய்வது அவசியம்.

* பருத்தி விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்தல் அவசியம். ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதைப்பதற்கு சற்று முன்னர் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

* சம வயதுள்ள ரகத்தை யாவரும் தேர்ந்தெடுத்து ஏக காலத்தில் (ஒரு வாரத்திற்குள்) விதைத்திட வேண்டும்.

* வயலைச் சுற்றிலும் உள்ள பூச்சிகளுக்கு மாற்றுணவாகப் பயன்படும் செடிகள், களைகளை அகற்றிச் சுத்தமாக வைக்க வேண்டும்.

* தொழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு இடுவது பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் குறைக்கும். (வேரழுகல், வாடல், நூற்புழு, தண்டுக்கூன்வண்டு, தரைக்கூன்வண்டு, வேர்ப்புழு)

* நன்மை தரும் பூச்சிகளான பொரிவண்டுகளின் பெருக்கத்திற்கு ஊடுபயிராக தட்டைப்பயறு பயிரிட வேண்டும்.

* ஓரப்பயிராக ஆமணக்கு பயிரிட வேண்டும். அதன்மூலம் புரொடீனியாப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். புரொடீனியாப் புழுக்களின் தாய் அந்துகளைக் கவர்ந்து முட்டையிட வைக்கும். முட்டைகளும், இளம் புழுக்களும் உள்ள ஆமணக்கு இலைகளை பறித்து அழிக்க வேண்டும்.

* கிரைசோபா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளின் பெருக்கத்திற்காக ஊடுபயிராக 20 சால் பருத்திக்கு ஒரு சால் மக்காச்சோளம் பயிரிட வேண்டும்.

முனைவர் எஸ்.ஜெயராஜன் நெல்சன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.






      Dinamalar
      Follow us