sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 குழந்தை பெற்ற 16 வயது மாணவி: 35 வயது உறவினருக்கு 'போக்சோ'

/

 குழந்தை பெற்ற 16 வயது மாணவி: 35 வயது உறவினருக்கு 'போக்சோ'

 குழந்தை பெற்ற 16 வயது மாணவி: 35 வயது உறவினருக்கு 'போக்சோ'

 குழந்தை பெற்ற 16 வயது மாணவி: 35 வயது உறவினருக்கு 'போக்சோ'


ADDED : டிச 02, 2025 04:26 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: துமகூரில், 16 வயது மாணவி ஆண் குழந்தை பெற்றெடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமான மாணவியின், 35 வயது உறவினர், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹுலியூர்துர்கா பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு கடந்த மாதம், 18ம் தேதி, வயிற்று வலி ஏற்பட்டது.

மாணவியை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார். அவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

அத்துடன் அவர் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். ஏழு மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

இதைக்கேட்ட பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹுலியூர்துர்கா போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார், 'போக்சோ' சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியின் உடல் சீரானதும், அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், மாணவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உறவினர் மல்லேஸ், 35, மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் இறங்கினர்.

இதையறிந்த மல்லேஸ் தலைமறைவானார். பத்து நாட்களுக்கும் மேல் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. ஊரின் புறநகர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், மல்லேஸ் வசமாக சிக்கினார். அவரை நேற்று போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us