sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை

/

 பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை

 பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை

 பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை


ADDED : டிச 07, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 07, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: தத்த ஜெயந்திக்காக வைக்கப்பட்ட பேனரை அகற்றுமாறு கூறியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் கணேஷ் கவுடா, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பஜ்ரங் தள் அமைப்பின் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணா கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் கணேஷ் கவுடா, 40. காங்கிரசை சேர்ந்தவர்.

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட, தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இந்நிலையில் சிக்கமகளூரின் முல்லையனங்கிரியில் உள்ள, தத்த குகைக்கோவிலில் நடக்கும் தத்த ஜெயந்திக்காக, சிக்கமகளூரு மாவட்டம் முழுதும் ஹிந்து அமைப்பினர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. சக்கராயப்பட்டணா பஸ் நிலைய பகுதியிலும், நிறைய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

காரில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு பேனர் சரிந்து அரசு பஸ் மீது விழுந்தது. இதனால் சாலையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றுவதற்கு கணேஷ் கவுடா நடவடிக்கை எடுத்தார்.

பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களிடம், 'பொதுமக்களுக்கு இடைஞ்சல் இன்றி பேனர் வைத்து கொள்ளுங்கள்' என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக கணே ஷுக்கும், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு காரில் கணேஷும், அவரது நண்பர்கள் சிலரும் சக்கராயப்பட்டணா பஸ் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

நான்கு பைக்குகளில் வந்த கும்பல், காரை மறித்து கணேஷுடம் தகராறு செய்தனர். அவரை காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கினர்.

5 பேர் கைது இ தனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், பைக்கில் வந்த கும்பலை தாக்கினர். இரு குழுவினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த நேரத்தில் பைக்கில் வந்தவர்களில் ஒருவர், அரிவாளை எடுத்து கணேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

கழுத்து, முதுகில் பலத்த வெட்டு காயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு மாவட்ட எஸ்.பி., விக்ரம் ஆம்தே, சக்கராயப்பட்டணா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

மரு த்துவமனையில் இருந்த கணேஷ் உடலுக்கு எம்.எல்.ஏ.,க்கள் தம்மய்யா, ஆனந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கணேஷ் கொலை தொடர்பாக பஜ்ரங் தள் அமைப்பின் 6 பேர் மீது வழக்குப்பதிவானது. இவர்களில் சஞ்சய், நிதின், நாகபூஷன், அஜய், மிதுன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அரசியல் ரீதியாக...

கணேஷ் கொலையை கண்டித்து, சக்கராயப்பட்டணாவில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சாலையில் டயருக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கணேஷ் கொலையாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வர் சித்தராமையா கூறினார். இந்த கொலையை கண்டித்து உள்ள, கர்நாடக மின்சார அமைச்சர் ஜார்ஜ், இது கோழைத்தனத்தின் உச்சம் என்று கூறி இருக்கிறார். பி ரேத பரிசோதனை செய்யப்பட்ட கணேஷ் உடல் நேற்று மதியம், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தின் போது பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக, காங்கிரசார் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. கணேஷின் உறவினர்கள் சிலர் கூறுகையில், 'ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த கணேஷ் அரசியல்ரீதியாக வளர்ந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற பயத்தில், அவரை கொலை செய்து உள்ளனர்' என்றனர்.








      Dinamalar
      Follow us