ஐ.பி.ஓ., முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்
ஐ.பி.ஓ., முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்
ADDED : நவ 12, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்
டி ஜிட்டல் பங்கு தரகு நிறுவனமான 'குரோவ்' பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளின் இறுதியில், 15.04 சதவீத உயர்வுடன் 128.85 ரூபாயாக நிறைவடைந்தது. முன்னதாக, வர்த்தகத்தின் இடையே, 31 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டது.
வரவேற்பை இழந்த 'பிசிக்ஸ்வாலா'
க ல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பிசிக்ஸ்வாலா' ஐ.பி.ஓ.,வின் இரண்டாவது நாளில், 13 சதவீதம் அளவிற்கே விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை சிறு முதலீட்டாளர்கள் 58 சதவீதமும்; நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் 6 சதவீதமும் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 3,480 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு பங்கின் விலை 103 முதல் 109 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

