sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அடுக்குமாடி கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

/

அடுக்குமாடி கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

அடுக்குமாடி கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

அடுக்குமாடி கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு


ADDED : மார் 22, 2024 01:19 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

வடகிழக்கு டில்லியின் கபீர் நகரில் இரண்டு அடுக்குமாடி கட்டடம் இருந்தது. இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் ஜீன்ஸ் துணி வெட்டும் கடை செயல்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 2:10 மணி அளவில் இந்த கடையில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர்.

கவனமாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் மூவரும் மீட்கப்பட்டனர். இதில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us