sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

/

 ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

 ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

 ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு


ADDED : டிச 10, 2025 12:43 AM

Google News

ADDED : டிச 10, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''ஓட்டுகளை திருடுவது தேசத்துக்கு விரோதமானது. இந்த குற்றத்தை தான், மத்தியில் ஆளும் பா.ஜ., செய்து வருகிறது. தேர்தல் கமிஷனை கைப்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது,'' என, காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

லோக்சபாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று பேசியதாவது:

ஓட்டு திருட்டு தேச விரோதமானது; ஆனால் இந்த குற்றத்தை செய்து தான், பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. சுதந்திரமாக, நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் கமிஷனை மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டில் அக்கட்சி வைத்துள்ளது. அதன் மூலம் ஓட்டு திருட்டில் ஈடுபடுகிறது.

ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு தேர்தல் கமிஷனும் துணை போகிறது. தேர்தல் கமிஷனை கைப்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., சீர்குலைக்கிறது. தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? அதற்கான நோக்கம் என்ன?

அந்த குழுவில் எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. 2023 டிசம்பரில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, எந்தவொரு தேர்தல் கமிஷனரையும் பதவியில் இருக்கும் போது தண்டிக்க முடியாது. யாரை திருப்திப்படுத்த இந்த சட்டம்? ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை தேர்தல் முடிந்த, 45 நாட்களில் அழிக்க உத்தரவிட்டது ஏன்?

மக்கள் சக்தி மற்றும் சமத்துவத்தை மஹாத்மா காந்தி வலியுறுத்தினார். ஆனால் பா.ஜ.,வின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்., சமத்துவத்தை எதிர்க்கிறது. அனைவரும் சமம் என்பதை அந்த அமைப்பு எதிர்க்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என, அந்த அமைப்பு நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரசுக்கு தகுதியில்லை!


ஜனநாயகத்தை பற்றி பேச காங்கிரசுக்கு தகுதியே இல்லை. 1976ல், ஒரேயொரு சட்டத்திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் அனைத்து உரிமைகளையும் பறித்து, அப்பதவியை, 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக அக்கட்சி மாற்றியது. ரேபரேலியில் ஓட்டுகளை திருடியே முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா வென்றார். காங்., ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சி தலைவர் பரிந்துரைத்த தேர்தல் கமிஷனரையா நியமித்தனர்? தயவு செய்து வரலாற்றை தெரிந்து ராகுல் பேச வேண்டும். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் இப்படித்தான், 'நோஸ்கட்' ஆக வேண்டியிருக்கும்.

- நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,








      Dinamalar
      Follow us