ADDED : மார் 17, 2024 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: லோக்சபா தேர்தல் அறிவித்ததால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பெலகாவி மாநகராட்சி மேயர், அரசு வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார்.
பெலகாவி மாநகராட்சி மேயர் சவிதா காம்ப்ளே. நேற்று மதியம் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.
உடனடியாக நகரின் கோலாப்பூர் ரவுண்டானா காரை நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், மேயரின் நற்செயலை பாராட்டினர். அத்துடன், அவர் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

