sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்

/

ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்

ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்

ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்

3


ADDED : டிச 09, 2025 06:59 AM

Google News

3

ADDED : டிச 09, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை, வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், ஸ்ட்ரெச்சரிலேயே பல கிலோமீட்டர் தூரம் மகன் இழுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. இது குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

பீகாரின் சசாரம் மாவட்டத்தில் வசிக்கும் சஞ்சய் குமார் என்பவரின் தாய், உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது தாய் உயிரிழந்தார். சஞ்சய் தன் தாயின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கேட்டார். ஆனால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் தன் தாயின் உடலை வைத்து, தன் வீட்டிற்கு இரவில் பல கிலோமீட்டர் இழுத்துக் கொண்டு சஞ்சய் சென்றுள்ளார். இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து சசாரம் மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான ஆம்புலன்ஸ் வசதி கூட மறுக்கப்பட்டது குறித்து அரசு விசாரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us