இந்தோனேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 20 பேர் பலி
இந்தோனேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 20 பேர் பலி
ADDED : டிச 09, 2025 08:06 PM

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் பரவியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, விவசாயத்துறைக்கு தேவையான டுரோன்களை தயாரித்து கொடுக்கும் அலுவலகமும் செயல்படுகிறது. இந்த கட்டடத்தில் இன்று( டிச.,09) மதியம் பலர் உணவருந்தி கொண்டிருந்தனர். சிலர் வெளியில் சென்றனர்.
இந்நிலையில் மதியம் முதல்மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. பிறகு இது மளமளவென அடுத்த தளங்களுக்கும் பரவியது. இதனால், தீயில் சிக்கியும், மூச்சுத்திணறியும் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அங்கு தீப்பற்றி எரிவதை பார்த்த சிலர், உயரமான ஏணிகள் மூலம் மாடியில் இருந்து இறங்கி உயிர் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

