sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்

/

அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்

அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்

அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்

5


UPDATED : நவ 02, 2025 10:10 AM

ADDED : நவ 02, 2025 09:37 AM

Google News

5

UPDATED : நவ 02, 2025 10:10 AM ADDED : நவ 02, 2025 09:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக, கடந்த மாதம் கார் விற்பனை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. அனைத்து வகை பிராண்டு கார்கள் விற்பனையும் அமோகமாக நடந்து உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, தீபாவளி, சாத் பண்டிகை என வந்த வண்ணம் இருந்தது.

இந்த சூழலில், பண்டிகை கால தேவை அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக, கடந்த மாதம் கார் விற்பனை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. மாருதி சுசூகி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்கோடா, கியா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் விற்பனை அபார வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கார் விற்பனை ஐந்து லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியது.

மாருதி சுசூகியின் கார் விற்பனை கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் 20 சதவீதம் அதிகரித்து 2.42 லட்சமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி முதல் துவங்கிய 40 நாள் பண்டிகை காலத்தில், ஐந்து லட்சம் கார் புக்கிங் செய்யப்பட்டதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

சில்லறை விற்பனையில் மாருதி 20% வளர்ச்சியைக் கண்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேவை இன்னும் அதிகரிக்கும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. இது குறித்து வாகன உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்புகளும், பண்டிகை கால தேவை காரணமாக, நாங்கள் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.

சந்தையில் தேவையையும் அதிக நுகர்வோர் ஆர்வத்தையும் கண்டோம். இந்த வேகத்தை விரைவுபடுத்த எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​தொழில்கள் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறோம்.

உலகளாவிய மின்னணு பாகங்கள் விநியோக இடையூறுகள் இன்னும் பெரிய அளவில் உள்ளன. இது எங்களுக்கு இதுவரை இல்லாத சிறந்த அக்டோபர் மாதமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

75 ஆயிரம் கார்கள்

மாருதி நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, ''எங்களிடம் போதிய அளவில் கார்கள் இருப்பில் இல்லை. இருப்பு நிறைய இருந்தால் இன்னும் கூடுதலான கார்களை விற்பனை செய்திருப்போம்,'' என்றார். டாடா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 75 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 15 சதவீத வளர்ச்சி என்று அந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர். ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் அதிகாரி தருண் கார்க், அக்டோபர் மாதம் முழுவதுமே நல்ல விற்பனை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us